Search This Blog

Nov 30, 2010

இலங்கையின் பிராந்திய அரசியல் காய்நகர்த்தல்: இலங்கையின் கட்டுபாட்டில் இந்தியா ?


M. ஷாமில் முஹம்மட்
இந்தியாவைச் சுற்றி, முத்துமாலை- STRING OF PEARLS – ஒன்றினை சீனா செய்து வருகின்றது  என  பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இது பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் எமது தளத்தில் பதிவு செய்து வருகின்றோம் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் போன்ற, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில், துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில் சீனா கால் பதிக்கிறது என்பதிலிருந்து இந்த முத்து மாலை விவகாரம் எழுகிறது.
இதற்கு போட்டியாக இந்தியாவும் வலைகளை பின்னிவருகின்றது அதிலும் இலங்கை விடையத்தில் இலங்கையை சீனாவுக்கு விட்டுகொடுக்க இந்தியா தயாராக இல்லை என்பதைத்தான் இந்தியா , சீனா இரண்டும் பொருளாதார உதவிகள் என்ற போர்வையில் இலங்கையில் தமது செல்வாக்கையும் , அதிகாரத்தையும் ஏற்படுத்தும் நகர்வுகள் எடுத்துகாட்டுகின்றன  என்பது நோக்கத்தக்கது இந்ந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்திலும், ஹம்பாந்தோட்டையிலும்    இந்தியத் துணைத் தூதரகங்களை    திறந்து வைக்கிறார் கண்டியிலும் விரிவாக பார்க்க துணைத் தூதரகம் ஒன்றை திறக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது அதேவேளை சீனா கிழக்கிலும் , மேற்கிலும் வடமேற்கிலும் பல அபிவிருத்தி திட்டங்களை  மேற்கொண்டு வருகின்றது இந்த சந்தர்பத்தில் எமது இணையத்தளத்தில் ஜூன் மாதம் நாம் பதிவு செய்த ‘ இலங்கையின் பிராந்திய அரசியல் காய்நகர்த்தல்: இலங்கையின் கட்டுபாட்டில் இந்தியா’ என்ற கட்டுரையை பதிவு செய்கின்றோம்.
இலங்கையின் பிராந்திய அரசியல் காய்நகர்த்தல்: இலங்கையின் கட்டுபாட்டில் இந்தியா
ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான லின் பாஸ்கோ இன்று வருகிறார் அரசியல் நல்லிணக்கம், அகதிகளின் மீள்குடியேற்றம்,மனிதஉரிமைகள் தொடர்பாக இலங்கைத் தலைவர்களுடன் லின் பாஸ்கோ கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என்று தெரிவிக்கபடுகின்றது , அதே வேளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் விசேட தூதுவர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் போர்க் குற்ற விவகாரங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டேவிட் பிரஸ்மன்,கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டனீஸ் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் சமாதான ஏற்பாட்டாளரும் மீள்குடியேற்றம் மற்றும் மீள் நிர்மாணத்துறை பிரதிநிதியுமான யசூசி அகாசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஆகியோருக்கிடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது
இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து சர்வதேச சமூகம் திருப்தி காண முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோதப் படுகொலைகளுக்கான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார் தமது நாட்டின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தி வரும் இலங்கை இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது இப்படி இருக்க இலங்கை நிலைவரம் தொடர்பாக இன்று புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஆராயவுள்ளது பிரிட்டிஷ் பிரதான எதிர் கட்சியான தொழிற்கட்சியை சேர்ந்த உறுப்பினர் சியோபாயின் மக்டொனாக் இவ்விவகாரம் தொடர்பான விடயத்தை சபையில் எழுப்பவுள்ளதாக தெரிகின்றது
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிச் செயலாளர் நாயகமும், அரசியல் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவருமான லியன் பஸ்கோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை மற்றும் ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அகாஷி விஜயம் செய்துள்ளமை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் விசேட தூதுவர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் போர்க் குற்ற விவகாரங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டேவிட் பிரஸ்மன் விஜயம் செய்துள்ளமை என பல்வேறு சர்வதேச சிறப்புத் தூதுவர்களின் வருகை இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்தவா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
அண்மைக்காலமாக இலங்கைக்கு வெளிநாட்டுப் பிரதி நிதிகளின் வருகை அதிகரித்து வருகின்றது இது பற்றி நேற்று கருத்து தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகளில் பரப்பப்பட்டுவரும் தவறான கருத்துகளைத் தெளிவுபடுத்துவதற்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இங்கு விஜயம் செய்வது அவசியம் எனதெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கு ஆதாரம் இருந்தால் அவற்றை இலங்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கலாம். அவற்றின் அடிப்படையில் சட்டத்தரணிகள் ஊடாக வழக்கு பதிவு செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தபாய ராஜபக்ச சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்குச் சவால் விட்டுள்ளார் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டியது யார் என்பது தொடர்பாக ஐ.நா.வுக்கும் இலங்கைக்குமிடையில் சர்ச்சை மூண்டிருப்பதற்கு மத்தியில் சர்வதேச பிரதிநிதிகளின் வருகை இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பது உண்மையானாலும் அழுத்தங்களுக்கு இலங்கை எந்த அளவு அடிபணியும் என்பதுதான் பொருத்து இருந்து பார்க்கப்படவேண்டிய விடையம்.
அழுத்தங்களுக்கு பிரதான ஆயுதமாக பொருளாதாரம் பயன்படுத்தபடுவதால் அழுத்தங்கள் இலங்கை மீது தாக்கங்களை ஏற்படுத்தும் வாய்புகள் காணபடுகின்றது எனிலும் இந்தியாவின் இலங்கை பற்றிய நிலைப்பாடு மேற்கு நாடுகள் இலங்கை பற்றிய தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு தடையாக அமைந்து வருகின்றது.
இலங்கை விவகாரம் பற்றி இந்தியாவின் நிலைப்பாட்டில் மேற்கு உலகம் தங்கியுள்ளது சீனா , இந்தியா என்ற பிராந்திய சக்திகளில் மேற்கு நாடுகளை சார்ந்து இருப்பது இந்தியாதான் கடந்த வருடம் ஆளும் தரப்பாகவிருந்த பிரிட்டிஷ் தொழிற்கட்சி பிரிட்டிஷ் பாராளுமன்றதில் இலங்கை விவகாரம் பற்றி ஆராயந்த போது இந்தியாவின் இலங்கை பற்றிய நிலைப்பாடு முக்கிமானதாக அவர்கள் ஏற்றுக்கொண்டதுடன் இந்தியாவின் நிலைபாட்டை அடிப்படையாகொண்ட தீர்மானகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நகர்வுகளைத்தான் மேற்கொண்டனர் என்பது சுட்டிக்காட்ட தக்கது தற்போது இலங்கையை பாதுகாப்பது இந்தியா என்றுதான் கூறவேண்டும்.
பிராந்திய மேலாதிக்க போட்டியின் விளைவாக சீனாவும் இந்தியாவும் தமது அயல் நாடுகளை தமது கைக்குள் வைத்திருக்கு வேண்டிய தவிர்க்க முடியாத, புவியல் சார் இராணுவ பொருளாதார போட்டி ஒன்றினுள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது இதில் சீனாவின் கரம் நன்கு ஓங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும் இந்தியாவை சூழவுள்ள பிராந்தியங்களில் சீனாவின் பல்வேறு பட்ட தளங்கள் உருவாக்கபட்டுள்ளது அதில் சீனா மிகவும் தீவிரம் காட்டிவருகின்றது இந்த இரு பிராந்திய பிரமாண்டங்களும் தமது மேலாதிக்க போட்டியை தற்போது இலங்கையில் மையம் பெற செய்யதுள்ளது இந்தியாவுக்கு இலங்கையின் வடக்கு கிழக்கு என்றால் சீனாவுக்கு தென்பகுதி என்று போட்டி விரிவடைந்து செல்கின்றது இலங்கையை கூறுபோடுவதில் இந்தியாவும் சீனாவும் கடும் போட்டி ஒன்றில் நீண்ட காலமாக ஈடுபட்டுவருகின்றது.
இதன் விளைவு இரு நாடுகளும் பல ஒப்ப ந்தங்களின் ஊடாக இலங்கையை தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்துகொண்டிருகின்றது என்று தான் கூறவேண்டும் இதனால் இலங்கைக்கு பல பொருளாதார அணிகூலங்கள் இருந்தாலும் நீண்ட கால நோக்கில் இலங்கைக்கு ஆரோக்கியமாக அமையாது இந்தியாவுக்கு இலங்கை மிகவும் அவசியமானது இந்தியா இலங்கை பற்றி இலங்கை அரசுக்கு முரணான முடிவுகளை எடுத்தால் இலங்கை சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கமான தோழமை கொள்ளும் என்ற இலங்கையின் மறைமுக மிரட்டலுக்கு இந்தியா அடங்கித்தான் செயல்படுகின்றது.
ஆனாலும் இலங்கையின் இந்த நிலைப்பாடு எந்த அளவுக்கு நீண்ட காலத்துக்கு வெற்றி பெரும் என்பது கேள்விக்குரிய விடையம் எனிலும் பிராந்திய அரசியல் தளத்தில் இலங்கை நகர்த்தும் காய்களின் இடங்களை பொருத்து இலங்கை தனது பிராந்திய முக்கியதுவத்தை பாதுகாக்க முடியும் தற்போது இந்த நிலைப்பாடுதான் இலங்கையை மேற்கு மேலாதிக்க சக்திகளிடம் இருந்து பாதுகாத்து வருகின்றது என்பதுதான் இலங்கை இன்று அடையும் இலாபம் நாளை இலாபத்தையும் முதலையும் விழுகும் அரசியல் மாற்றங்கள் இடம்பெறலாம்

வக்பு சபையை திறம்பட செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஹக்கீம்


AL HIDHAYA MEDIA WORLD:
ரவூப் ஹக்கீம் நீதியமைச்சில் நேற்று திங்கட்கிழமை காலை கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில். முஸ்லிம் பொது சொத்துக்களை நிர்வாகம் செய்யும் வக்பு சபையை திறம்பட செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வக்பு சபை தனது முதல் மாகாண கிளையை கடந்த 8 ஆம் திகதி காத்தான்குடியில் திறந்து வைத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது இக்காரியாலயத்தின் ஊடாக மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரசாக்கள், அரபுக் கல்லூரிகள் என்பவற்றினை பதிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் கொழும்புக்கு சென்று தமது தேவைகளை நிறைவேற்றும் சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க
மேலும் அவர் நல்லிணக்கசபை நியாயாதிக்க சபை போன்றவற்றையும் திறம்பட செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் -இன்று முதல் நீதியமைச்சு சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும்” என்றும் நீண்டகாலமாக எதுவித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவர்களின் விடுதலை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருடனும் கலந்துரையாடப்படும் என்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

‘ஈரானை தாக்குமாறு அமெரிக்காவை அரபு நாடுகள் கோரியது’ சோடிக்கப்பட்டவை



ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என்று சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவை வலியுறுத்தியதாக வெளியான தகவலை மறுத்த நஜாத் நஜாத், இது ஈரானை மனோ ரீதியாக தாக்கும் அமெரிக்காவின் போர் தந்திரமே என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி அஹமதி நஜாத், இந்தத் தகவல்கள் கசியவில்லை. இவை வெளியிடப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம் என்று கூறியுள்ளார் விரிவாக பார்க்க
ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நஜாதிடம் பிரஸ் தொலைக்காட்சி விக்கிலீக் மூலம் தகவல்கள் கசிந்தது குறித்து கேட்டபோது, “நான் உங்கள் கூற்றைச் சரி செய்ய விரும்புகிறேன். இந்த ஆவணங்கள் கசியவிடப்படவில்லை. இவை ஒரு ஒழுங்கமைப்பில் வெளியிடப்பட்டுள்ளன” என்று கூறினார்.
இந்த ஆவணங்களை வெளியிட்டதே அமெரிக்க அரசுதான். இதன் மூலம் அவர்களாகவே தீர்ப்பு எழுத விரும்புகின்றனர். இந்த ஆவணங்களுக்கு சட்ட மதிப்பு எதுவும் இல்லை. இந்த ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் அமெரிக்கா விரும்பும் அரசியல் மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் ஈரானிய ஜனாதிபதி ஜனாதிபதி கூறினார்.
விக்கிலீக்ஸ் கசியவிட்டதாகக் கூறப்படும் இந்த நாடகமே கருத்து சொல்வதற்குத் தகுதியானதல்ல. இதனை ஆராய்வதன் மூலம் தங்களுடைய நேரத்தை விரயம் செய்ய எவரும் விரும்பமாட்டார்கள் என்றும் நஜாத் கூறினார்.
வளைகுடாப் பகுதியில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் மற்ற நாடுகளுடன் நட்பாகவே உள்ளன. இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதன் மூலம் நட்பு நாடுகளிடையே உறவுகள் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.
 

காஷ்மீரில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணப் படம் (Video)



காஷ்மீரில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணப் படம்(Video)
http://networkedblogs.com/bcuL4
News:tmmk.in

தாய் படிக்க சொல்லி கண்டிக்க; 10 வயது மகன் தூக்கிட்டுக் கொண்டான்

தாய் படிக்க சொல்லி கண்டிக்க; 10 வயது மகன் தூக்கிட்டுக் கொண்டான்


வவுனியா நேரியகுளம் மாங்குளம் கிராமத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் தூக்கிட்டு மரணமடைந்துள்ளான். 

இந்த மரணம் தொடர்பாக தெரியவருவதாவது, அப்துல்முனாப் முனவ்வர் எனப்படும் இச்சிறுவன் நேற்று மாலை 6:45 மணியளவில் மரணமாகியுள்ளான். மாங்குளம் அல்ஹாமியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 4ம் தரத்தில் கல்வி பயிலும் இம்மாணவனை இரவு வேலையில் படிக்கும் படி கூறி தாயார் கண்டித்துள்ளார். திடீரென வீட்டிற்குள் ஓடிய சிறுவன் வீட்டில் தொங்கவிடப்பட்ட நிலையிலிருந்த தொட்டில் கயிற்றில் சுருக்கிட்டு தூக்கிலிட்டுள்ளான் எனக் கூறப்படுகின்றது. 

உடனடியாக மாங்குளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 40 தடவைகள் துடித்ததாகவும், மேலதிக சிகிச்சைகளுக்காக செட்டிகுளம் பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்ட வேளையில் இச்சிறுவனின் இதயத்துடிப்பு யாவும் செட்டிகுளம் வைத்தியசாலையை அடையும் முன் நின்றுபோனதால் சிறுவன் இறந்து விட்டதாக செட்டிகுளம் வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கணவனால் கைவிடப்பட்ட இச்சிறுவனின் தாயார் முஜீபா தொழிலுக்காக வெளிநாடு சென்று தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ள நிலையில் இரண்டாவது நாளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மூத்த பிள்ளையான இச்சிறுவனுக்கு மூன்று தங்கைகளும் உள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. தனது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்காக தனது தாயாரிடம் பிள்ளைகள் அனைவரையும் ஒப்படைத்த நிலையிலேயே வெளிநாடு சென்று வந்துள்ளார். துடிதுடிப்பான இச்சிறுவனது மரணத்தால் தாய் தற்போது புத்தி பேதளித்த நிலையிலுள்ளார். 

இம்மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு இன்று காலை அனுப்பப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஈரான் அணுசக்தி விஞ்ஞானி குண்டுவெடிப்பில் படுகொலை

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த குண்டுவெடிப்பில் ஈரான் அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்.

டெஹ்ரானில் ஷாஹித் பெஹெஸ்தி பல்கலைக்கழகத்தில் மாஜித் ஷஹரியார்தான் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அணுசக்தி விஞ்ஞானியாவார்.

இவருடைய காரில் சில நபர்கள் வெடிக்குண்டை பொருத்தியதால் குண்டு வெடித்தது. விஞ்ஞானி தான் பணிபுரியும் இடத்திற்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காரின் கதவுகளில் குண்டுகளை பொருத்தியுள்ளனர். இதனை அரசு தொலைக்காட்சியின் இணையதளம் தெரிவிக்கிறது.

இஸ்ரேலிய ஏஜண்டுகள்தான் இத்தாக்குதலுக்கு காரணமென ஈரான் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மற்றொரு தாக்குதலில் ஈரானின் அணுசக்தி விஞ்ஞானி ஃபரீதுன் அப்பாஸிக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இவருடைய காரிலும் வெடிப்பொருள் பொருத்தப்பட்டுள்ளது.

ஈரானில் சமீபகாலமாக அணுசக்தி விஞ்ஞானிகள் மீது நடத்தப்படும் வெடிக்குண்டுத் தாக்குதல்களில் மர்மம் நீடிப்பதாக ஈரான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வருடத் துவக்கத்திலும் ஒரு ஈரான் அணுசக்தி விஞ்ஞானி கொலைச் செய்யப்பட்டிருந்தார்.

விக்கிலீக்ஸில் அமெரிக்க ராஜாங்க ரகசியங்கள்


-BBC News-
விக்கிலீக்ஸ்
விக்கிலீக்ஸ் இணையத்தளம் அமெரிக்க ராஜாங்க அலுவலர்கள் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளை சேகரித்து அவற்றில் 220 ஐ வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளும், ‘கார்டியன்’, ‘நியூயார்க் டைம்ஸ்’உள்ளிட்ட ஐந்து ஊடக குழுமங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்களில் உள்ள முக்கிய சாரம்சங்களை பார்ப்போம்.
இரான் மீது தாக்குதல்
பல அரபு நாட்டு தலைவர்களும், அவர்களது பிரநிதிகளும் இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவை வற்புறுத்தியுள்ளனர். இரானின் சந்தேகத்துக்கு உரிய அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை நிறுத்தவே இந்த தாக்குதல் கோரிக்கை.
சவுதி மன்னர் அப்துல்லா
ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு, வாஷிங்டனில் இருக்கும் சவுதி அரேபிய தூதர் அடெல் அல் ஜுபைர், சவுதி மன்னர் அப்துல்லா, அடிக்கடி அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ‘பாம்பின் தலையை வெட்ட வேண்டும்’ என்று மன்னர் விரும்புவதாக அல் ஜுபைர் கூறுகிறார். அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சரோ, தெஹ்ரான் மீது தீவிரமான தடைகளை விதிக்க வேண்டும் என்றே அவர் கூறியுள்ளார்.
பஹ்ரைனின் மன்னர் ஹமத் பின் இசா அல் காலிபாவுக்கும் அமெரிக்க இராணுவ ஜெனரல் டேவிட் பெட்ரயஸுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், ‘எப்படியாவது’ இரானின் அணு திட்டத்தை நிறுத்துமாறு மன்னர் கூறியுள்ளார்.
ஐ.நாவில் வேவு பார்ப்பது
அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹில்லாரி கிளிண்டனின் அவர்களின் பெயரில் அனைத்து ராஜாங்க அதிகாரிகளுக்கும் அனுப்பபட்டுள்ள ரகசிய செய்தியில், ஐ.நாவில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளின் உயிரியில் தகவல்களான, மரபணு, கைரேகை போன்றவற்றை சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
துணை செயலர்கள், விசேஷ அமைப்புகளின் தலைவர்கள், பிரதான ஆலோசனையாளர்கள், தலைமை செயலரின் முக்கியமான செயலர்கள், அமைதி படையினரின் தலைவர்கள், இராணுவ தலைவர்களின் போன்றவர்களின் தகவல்கள் சேகரிக்க சொல்லப்பட்டுள்ளது.
அதே போன்று கிரெடிட் கார்ட், மின்னஞ்சல் முகவரிகள், ரகசிய எண்கள், பெயர்கள், கணிணீ வலைகளுக்கான ரகசிய குறியீடுகள் போன்றவற்றை சேகரிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற ஒன்பது ரகசிய உத்தரவுகள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் கொண்டலீசா ரைஸின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.
உலக தலைவர்கள் மீதான கருத்து
இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோணியை ரோமில் உள்ள அமெரிக்க ராஜாங்க அதிகாரி ஒருவர், பொறுப்பற்ற, சுயதம்பட்டம் அடிக்கும் நவீன ஐரோப்பாவுக்கு பிரயோஜனமில்லாத தலைவர் என்று வர்ணித்துள்ளார்.
அதே போன்று ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சாலா மெர்கல் அவர்களை எவ்விதமான கற்பனா திறன் இல்லாத தலைவர் என்றும், லிபிய தலைவர் கர்னல் கடாபி ஒரு உக்ரைன் பேரழகியையே பெரிதும் நம்பியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கிம் ஜோங் இல்
வடகொரிய தலைவர் கிம் ஜோங் இல் அவர்களை தடுமாறி கொண்டிருக்கும் பெருசு என்று வர்ணித்துள்ள ராஜாங்க அதிகாரிகள் இரான் அதிபர் மஹமூது அஹெமெதிநிஜாத் அவர்களை ‘ஹிட்லர்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உலக தலைவர்களை இவ்வாறு கிண்டலடிக்கும் தொனியில் ராஜாங்க அதிகாரிகள் தகவல்களை அனுப்பியிருந்தாலும், இவற்றால் எல்லாம் ராஜாங்க உறவுகள் பாதிக்காது என்று பிபிசியின் ராஜாங்க ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகிறார்.
இதே நேரத்தில் நியூயார்க் டைம்ஸில் வெளியாகியுள்ள ரகசிய செய்தி ஒன்றில், பாகிஸ்தானின் அணுசக்தி உலைகளில் உள்ள ரேடியோ கதிர்வீச்சு கொண்ட பொருட்கள் குறித்து அமெரிக்கா கொண்டுள்ள கவலைகளையும், அவற்றை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்று அது கொண்டுள்ள கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதே போன்று மிகவும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை பாகிஸ்தானில் இருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வெளியேற்ற அமெரிக்கா முயற்சித்து வருவதவும் தெரிய வந்துள்ளது.
இது போன்ற தகவல்கள் ராஜாங்க உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகிறார்.
விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜுலியன் அஸாங்கே, அரபு செய்தியாளர்களிடம் வீடியோ மூலம் ரகசிய செய்தி கசிவு தொடர்பாக பேசும் போது, அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் ஒரு சிலர் தகவல்களை வெளியிட விரும்புவதாக கூறினார்.
Courtesy: BBC Tamil

Nov 29, 2010

விக்கிலீக்ஸ் வெளியிட்டது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள்

AL HIDHAYA MEDIA WORLD.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், தூதரக நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம்.

அமெரிக்க வெளியுறவுத்துறை, உலகமெங்குமுள்ள 270 அமெரிக்க தூதரகங்கள், தூதரக துணை அலுவலகங்கள் இடையே ரகசியமாக பரிமாறப்பட்ட தகவல்களைத்தான் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை கடந்த 3 ஆண்டுகளில் நடந்தவையாகும். ஈரானை தாக்குவதற்கு சவூதி ஆட்சியாளர்கள் அமெரிக்காவை தொடர்ந்து வலியுறுத்தியதாக ரியாதில் அமெரிக்க தூதரகத்தின் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டத்தை எவ்வாறாயினும் தடுக்கவேண்டும் என சவூதி மன்னர் அப்துல்லாஹ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்ததாக சவூதி அமெரிக்க தூதரகம் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு புரியவைத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா தலைமையை கூட அமெரிக்க அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்ததாகவும் இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாமலிருப்பதற்காக செறியூட்டப்பட்ட யுரேனியத்தை பாகிஸ்தான் அணுசக்தி நிலையத்திலிருந்து திருடுவதற்கு கூட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்கள் இதில் தலையிடும் என்பதால் இந்த திருட்டு முயற்சி கைவிடப்பட்டது.

வடகொரியாவை தாக்குவதற்கு தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனாவிற்கு ஆசையூட்டி தங்களுடன் இணைய தென்கொரியா முயற்சித்தது.

குவாண்டனாமோ சிறைக் கைதிகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், பல நாடுகளும் இதனை எதிர்த்தன.

சர்வதேச அளவில் கூகிள் உள்ளிட்ட இணையதளங்களை ஹேக் செய்யவும், சைபர் துறையில் இதர தாக்குதல்களுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகாரம் அளித்தது.

சீன அரசு நியமித்த சட்டவிரோத நிபுணர்கள் உலகநாடுகள், தலாய்லாமா, அமெரிக்க வர்த்தகர்கள் உள்ளிட்டோரின் சைபர் அக்கவுண்டுகளும், இணையதளங்களும் ஹேக் செய்தனர்.

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சி.ஐ.ஏ அதிகாரியை கைதுச் செய்யக்கூடாது என ஜெர்மனியை அமெரிக்கா மிரட்டியது. ஆப்கானில் ஜெர்மனியைச் சார்ந்த குடிமகன் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரஷ்ய அதிபர் புடினுக்கும் இத்தாலி பிரதமரும் வர்த்தக மன்னனுமான சிலிவோ பெர்லஸ் கோணிக்குமிடையேயான தொடர்பு. சிலிவோவிற்கு உதவுவதற்காக புடின் ஏராளமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆப்கான் துணை அதிபர் யு.ஏ.இக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது 5 கோடியே இருபது லட்சம் அமெரிக்க டாலர் கள்ள நோட்டுகளுடன் பிடிபட்டபொழுது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விக்கிலீக்ஸ் மொத்தம் 250000 ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் 3038 ஆவணங்கள் டெல்லியிலுள்ளதாகும். 2278 காட்மாண்டுவிலுள்ளது. 3325 ஆவணங்கள் கொழும்புவிலிருந்தாகும். 2220 ஆவணங்கள் இஸ்லாமாபாத்திலுள்ளதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Nov 28, 2010

விக்கிலீக்ஸ் வெளியிடப்போகும் ரகசிய ஆவணங்கள்: மீண்டும் பீதியில் அமெரிக்கா

Wiki Leaks

விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடவிருக்கும் ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விக்கிலீக்ஸ் வெளியிடவிருக்கும் ரகசிய ஆவணங்களால் சர்வதேச உறவுகள் பாதிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திவரும் கொடூரங்களைப் பற்றியும், மனித உரிமை மீறல்களைக் குறித்தும் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவிற்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தன. கடந்த அக்டோபரில் வெளியிட்ட ரகசிய ஆவணங்களைவிட ஏழுமடங்கு வலுவான ஆதாரங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.

அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளுடன் நடத்திய ராஜாங்கரீதியான பேச்சுவார்த்தைகள், தனிப்பட்ட நபர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் ரகசிய விபரங்களை விக்கிலீக்ஸ் வெளியிடவிருக்கிறது.

அமெரிக்கா நடத்திய ரகசிய உரையாடல்களின் விபரங்களை வெளியிடுவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் எனவும், இது பல்வேறு நபர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறும் எனவும், தேசிய நலன்களை கெடுக்கும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் க்ரவ்லி தெரிவித்துள்ளார்.

அரசுகளுடனும், தனிப்பட்ட நபர்களுடனும் நடைபெற்ற உரையாடல்கள் குறித்த ஆவணங்களை விக்கி லீக்ஸ் வெளியிடுவதால், உலகமெங்குமுள்ள தங்களுடைய நண்பர்கள், தூதரக பிரதிநிதிகள் ஆகியோர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும்.

தங்களின் சில ரகசிய ஆவணங்கள் விக்கிலீக்ஸிற்கு கிடைத்தது ஏற்கனவே தெரியும் எனவும் க்ரவ்லி தெரிவிக்கிறார். கசியப்போகும் ரகசிய விபரங்களைக் குறித்து அமெரிக்க காங்கிரஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்குமுள்ள அமெரிக்க தூதரகங்கள் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு தகவல் அளித்துள்ளன.

விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்களை வெளியிடக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம். ஆனாலும், ரகசிய ஆவணங்கள் வெளிவந்தால் அதனை எதிர்கொள்ளும் முன்னேற்பாடுகளை நாங்கள் செய்துவிட்டோம். இவ்வாறு க்ரவ்லி தெரிவித்துள்ளார்.

வெளிவரப்போகும் விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்டது எனினும், அவை ராணுவ விருப்பங்களுக்கும் கேடாகமாறும் என பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் கர்னல் டேவிட் லாபான் கூறுகிறார்.

தாங்கள் பதில்கூற நேரிடும் என்ற அச்சத்தால் இவ்விவகாரத்தை மிகைப்படுத்த பெண்டகன் முயல்வதாக விக்கிலீக்ஸ் ட்விட்டரில் பதிலளித்துள்ளது.

ஆப்கான் போரைக் குறித்த 77 ஆயிரம் ரகசிய ஆவணங்களை கடந்த ஜூலையிலும், ஈராக் போரைக் குறித்த 4 லட்சம் ரகசிய ஆவணங்களை கடந்த அக்டோபரிலும் விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.












Nov 27, 2010

இந்திய சகோதரர்களே உங்கள் உண்மையான பிரச்சினை இதுவா என்று சற்று பாருங்களேன்




முஷாஹித் அஹ்மத்
ஜனநாயகம் என்பது வந்துவிட்ட ஒன்றல்ல. என்றைக்கும் வர இருக்கக் கூடிய ஒன்றாகவே அது உள்ளது. அது வாக்களிக்கப் பட்ட ஒரு வாக்குறுதி மட்டுமே. எதிர்காலம் சார்ந்த ஒன்றே அது. (ழாக் தெரிதா)

உலகில் மிகப் பெரும் ஜன நாயகம் என்று புகழ்ந்து தள்ளப் படும் எந்தத் தேசத்திலும் தெரிதா சொல்வதுபோல் ஜனநாயகம் இன்னும் வரவேண்டிய ஒன்றா கவே உள்ளது. அது ஐக்கிய அமெ ரிக்காவாகவோ இந்தியாகவோ இருக்கலாம்.

உலகில் மிகப் பெரும் எண் ணிக்கையில் ஒரு சமூகம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் சிறுபான்மை யாக வாழ்கின்றனர் எனில், அது இந்திய முஸ்லிம் சிறுபான்மை மக்களையே குறிக்கும். 20 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் சிறு பான்மையாக வாழ்கின்றனர்.

முஹம்மத் இப்னு காஸிம், மஹ்மூத் கஸ்னவி, சுல்தான் ஷிஹாபுத்தீன் கோரி, குத்துப்புத் தீன் ஐபக், மம்லூக்கியர்கள், கில்ஜிகள், துக்லக், லோடிகள், இறுதியில் பாபர் பரம்பரையில் வந்த மெகலாயர்கள் என 700 ஆண்டுகாலம் இந்தியாவைக் கட்டிக் காத்த பெருமை இந்திய முஸ்லிம்களைச் சாரும். அவர் களின் செங்கோல் வளையா ஆட்சிக்கு டெல்லியின் செங்கோட்டை யும் மீண்டும் மீண்டும் உலக அதிசயங்களில் ஒன்றாய் மிளிரும் தாஜ்மஹாலும் குத்துபுத்தீன் ஐபக்கின் குத்ப் மினாராவும் சாட்சிகளாக உள்ளன.

எனினும், சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டுகால இந்திய வரலாறு முஸ் லிம்களுக்கு எதிரா கவே இயங்கி வருகின்றது. தேசத் தைப் பிரித்தவர்கள் என்ற கடுங் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு மீளவும் பழிவாங்கப்படும் ஒரு சமூகமாகவே அவர்கள் ஆக்கப் பட்டுள்ளனர். சமீபத்திய பாபரி மஸ்ஜித் தொடர்பான இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிமன்றங் கள் மீது முஸ்லிம்கள் வைத்தி ருந்த நம்பிக்கையும் சிதைந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
மொகலாயர்களின் ஆட்சியை வீழ்த்த சதிப் புரட்சிகளில் ஈடு பட்டு வந்த மாராட்டியர்கள், அவர்களின் வழித்தோன்றல் களாய் வந்துதித்துள்ள இந்துத் துவ தீவிரவாதிகள் உள்ளிட்டு மாறி மாறி வந்த அரசாங்கங்க ளால் தலைவிதி பந்தாடப்படும் சமூகமாகவே முஸ்லிம்கள் மாற் றப்பட்டுள்ளனர். 1925ல் தொடங் கிய ராஸ்திரிய்ய சிவயன் சேவக் சங் (RSS), ஜனசல், ஏரி, பஜ்ரங் தள், இந்து மகாசபை, சிவ சேனை, சங்கராச்சாரி இந்து முன்னணி என முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் பல்வேறு வடி வங்களில் உருவெடுத் துள்ளன.

இஸ்லாமியர்களையும் கிறிஸ் தவர்களையும் அழித்தொழிப் பதே இவற்றின் இறுதி நோக்க மாகும். பிஜேபியினூடாக வலு வூட்டப்பட்டுள்ள இவ்வியக்கங் கள் காங்கிரஸ் ஆட்சியிலும் வலு விழந்து விடவில்லை என்ப தையே பாபரி மஸ்ஜித் இடிப்பும் 18 ஆண்டுகளுக்குப் பிந்திய நீதி மன்றத்தின் தீர்ப்பும் எடுத்துரைக் கின்றது.

வரலாற்றை திரித்தும் வன் முறையைத் தூண்டியும் முஸ்லிம் கள் மீது அவதூறுகளைச் சுமத்தியும் தேசத் துரோகிகளாக முத் திரை குத்தியும் நடந்துவரும் அநீதி களைப் பார்த்து உலகமே பிரமிக்கக் கூடியவை. 1967 முதல் இது வரைக்கும் 10க்கும் மேற் பட்ட மிகப் பெரும் மதக் கலவ ரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்டுள்ளன.

அஸ்மா ஜஹாங்கிர் குறிப்பிடு வது போன்று பிஜேபி அதிகாரத் தில் இல்லாதபோதும் எதிர்காலத் திலும் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய மத இனக் கலவரங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சச்சார் அறிக்கை குறிப் பிடுவதுபோன்று, பொருளாதா ரம், கல்வி ஆகிய முக்கிய துறை களில் முஸ்லிம்கள் தாழ்த்தப் பட்ட தலித்களை விட ஒரு நூற் றாண்டு பின்னடைந் திருக்கும் நிலையில் இந்திய முஸ்லிம் களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதே இப்போது பலரும் எழுப்பும் கேள்வியாகி யுள்ளது.

பிஜேபியின் ஆட்சியோ, மதச் சார்பற்றது எனக் கூறிக்கொள் ளும் காங்கிரஸ் ஆட்சியோ சலு கைகள் எப்படிப் போயினும் இந் திய முஸ்லிம்களின் அடிப்படை யான உரிமைகளையே உத்தரவா தப்படுத்த முடியாத நிலையில் இந்திய முஸ்லிம்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
மிகுந்த மரியாதைக்குரிய நீதி மன்றங்கள் கூட இந்துத்துவ சாய லில் செயல்படத் தொடங்கிவிட் டன. ராஜஸ்தான் போன்ற மா நிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் கூட இந்துத்துவ போதை யூட்டப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அபாயம் மேலெழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய முஸ்லிம் களை ஒருங்கிணைப்பதும் கலா சார ஒருமைப்பாட்டின் கீழ் ஒன் றிணைப்பதும் பாரிய சவாலாக மாறியுள்ளது.

உலகில் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற, சாதி, மதக் கலவரங்க ளில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியாவில் சட்டத் தின் ஆட்சியும் நீதித்துறை மற்றும் காவல் துறையின் சுதந்திர மான இயக்கமும் எப்போதோ பொய்த்துவிட்டன. எல்லாவற் றிலும் காவி முலாம் பூசப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் நிலை உருவாகி விட்டது.
பாகிஸ்தானைப் பிரித்துப் போட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தப்படும் முஸ்லிம்கள் இந்தியாவின் எந்த மூலை முடுக்கிலும் நடை பெறும் வன்முறைக்குக் காரணம் என்று ஏற்கனவே எழுதி வைத்துவிட்ட வாய்ப்பாட்டை பயன்படுத்துவது போன்றே நடாத்தப்படுகின்றனர். வடக்கிலி ருந்து தெற்கு வரை இந்திய சிறைச்சாலைகளில் முஸ் லிம்கள் தமது வீதா சாரத்தை விட நிரம்பி வழிவதற்குக் காரணம் இதுவே.

மகாராஷ்த்திராவின் இந்துத் துவ பாசிஸம் தெற்கை நோக்கி யும் வேகமாக விரிவுபெற்று வருகின்றது. எல்லாத் துறைகளிலும் முஸ்லிம்கள் குறிவைத்து வீழ்த் தப்படுகின்றனர். பயங்கரவாதம், தீவிரவாதம் குறித்து செயல்படும் போது சர்வதேச சட்டங்களைப் பாரதூரமாக மீறிவரும் ஓர் அரசாங்கம் உள் நாட்டில் ஆயுதத் தொழிற்சாலைகளுடன் செயற் படும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளைக் கண்டுகொள் ளாமல் இருப்பதேன்?

சமீபகாலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகளுக்கும் வன்முறை களுக்கும் மேற்போந்த இயக்கங் களே சூத்திரதாரிகள் என நிரூபிக் கப்பட்டும் இதுவரை சட்டத்தின் ஆட்சி செயலிழந்து போனதேன்? சச்சார் அறிக்கையின் ஒரு துளியை யேனும் மதச்சார்பற்றவர்கள் என்று பீற்றிக் கொள்ளும் காங்கி ரஸ்காரர்கள் அமுல்படுத்தாதது ஏன்? காஷ்மீர் இந்தியா வின் நிலப் பகுதியல்ல என்று கூறிய அருந்ததி ராய் மீது தேசத் துரோகி என்று குற்றம் சுமத்தப்படுவது ஏன்? இதுபோன்ற கேள்விகள் சிறுபான்மை இந்திய முஸ்லிம் களின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்ச அலைகளையே எழுப்புகின்றன.

உண்மையில் பாரததேசம், இந்தியா என்பதெல்லாம் ஒரு வரலாற்றுக் கட்ட மைப்பே. இந் தியா ஒருபோதும் தனிநாடாய் இருந்ததில்லை. காரணம், இந் தியா எப்போதும் தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவே இருந்து வந்துள் ளது. காலனித்துவ சக்தி களின் நிருவாக வசதிக்காக ‘இந் தியா’ என்ற ஒரு தேசம் கட்ட மைக்கப்பட்டது.

சமய, இன, மொழி அடையா ளங்களைக் கொண்ட தேசிய இனங்களின் அபிலாஷைகளை ஒருபோதும் இந்தியா கவனத்தில் எடுத்ததில்லை. காஷ்மீர் பிரச் சினை இதற்கோர் சிறந்த உதார ணமாகும். மதச்சார்பின்மையே இந்திய அரசியலமைப்பின் அடி நாதம் என்று வாய்ச் சவாடல் விடுத் தாலும் இந்தியா எப்போதும் (காங்கிரஸ் ஆட்சியிலும்) இந்துப் பார்ப்பனியர்களின் அதிகார மையமாகவே இருந்து வருகின் றது. இந்தியா மதச்சார்பற்ற ஜன நாயகம் என்பது ஒரு புனைவாகும். இந்தப் புனைவை அங்கி ருந்து வரும் ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறி மக்களை நம்ப வைக்கின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள மதச்சார்பற்ற ஷரத்துகள் ஏட்டு வடிவமாகவே நீடிக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி களை கொட்டக் கொட்ட விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை விட வேறெ தனையும் ஜனநாயக சக்திகளால் செய்ய முடியவில்லை. காவிப் பாசிசத்தைப் பகைக்காத ஓர் அரசியல் பண்பாடு மதச்சார் பற்ற இந்தியாவில் ஒரு வினோத மான கனவாகவே இருக்க முடியும்.

சுதந்திரத்தை யாரும் உனக்குத் தருவதில்லை. சமத்துவத்தையும் யாரும் வழங்குவதில்லை. நீ ஒரு மனிதனாக இருப்பின் அதை நீயே எடுத்துக் கொள் என மெல் கம் எக்ஸ் குறிப்பிடுவது போன்று, இந்திய முஸ்லிம்களே தமது எதிர் காலத் தலைவிதியை தீர்மானிக்க வேண்டியுள்ளது.
இராணுவ ரீதியாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள ஓர் பாசிச அமைப்பை எவ்வித ஒழுங்கு படுத்தலுமின்றி வாழும் ஒரு சமூ கம் ஒருபோதும் எதிர்கொள்ள முடியாது. கலாசார அடிப்படை யிலான ஒருமைப்பாடும் ஐக்கிய முமே இந்திய முஸ்லிம்களின் மிகப் பெரும் பலமாகும். முஸ் லிம் சமூகத்தின் எந்தவொரு போராட்டமும் இஸ்லாத்தின் அடிப்படையில் நின்றே வழி நடத்தப்பட வேண்டும். அதற்குப் போதிய சித்தாந்த அடிப்படை களைக் கட்ட வேண்டும்.


சிறுபான்மை முஸ்லிம்களுக் கான ஒரு இஸ்லாமிய சட்ட முறையை (பிக்ஹ்) உருவாக்க வேண்டும். அப்போதுதான் சிறுபான்மையாக முஸ்லிம் கள் வாழும் இந்தியாவில் ஆயுதங் கள், வன்முறைகள் அற்ற ஓர் அரசியல் போராட்டத்தை முன் னெடுப்பதற்கான கொள்கைத் தெளிவும் பாதைகளும் புலனா கும். இந்திய முஸ்லிம்கள் இது குறித்தே இப்போது கவனம் குவிக்க வேண்டும்.

Nov 25, 2010

வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனியான சட்ட கொள்கை ஒன்றின் ஊடாக அணுகப் படவேண்டும்





முஸ்லிம் மீள் குடியேற்றம் ஓர் ஆய்வு: M. ஷாமில் முஹம்மட்
1990 இல் வட  மாகாணத்தின்   பூர்விக குடிகளில் ஒன்றான  முஸ்லிம்கள்  புலி பயங்கர வாதத்தால்  வெளியேற்றபட்டனர்    அவர்களின் அனைத்து அசையும் அசையாத சொத்துகளும் புலி பயங்கரவாதத்தால்  கொள்ளையிடப்பட்டது  கோடிகணக்கான சொத்துகளின் சொந்தகாரர்கள்  சில  மணித்தியால அவகாசத்தில் அணைத்தையும்  இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர்  அன்றில் இருந்து இன்றுவரை வடமாகாண முஸ்லிம்களில் அகதி வாழ்கை இருபது வருடயங்களை எட்டியும் விடிவு இன்றி தொடர்கின்றது.
வடக்கில் இருந்து அன்று வட மாகான முஸ்லிம்கள் ஒரு இலச்சதுக்கும் அதிகமான மக்கள் பலவந்தாமாக வெளியேற்ற பட்டனர் இன்று அவர்களின் தொகை இரு மடங்குகளால் அதிகரித்துள்ளது ஒரு கும்பமாக வந்தவர்கள் இன்று மூன்று குடும்பங்களாக , நான்கு குடும்பங்களாக பெருகியுள்ளார்கள்  20 வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆகவே மீள் குடியேற்றம் என்பது அவர்களின் இடங்களை அவர்களுக்கு பெற்று கொடுபதுடன் , அவர்களின்  மஸ்ஜித்துகளையும், பாடசாலைகளையும் மீள  கூரை போட்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசி கொடுப்பதுடன் முடிந்து விடாது.
வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம்  தனித்துவமாக அணுகப்படவேண்டும் , தமிழ் மக்களின் மணிக் பாம் போன்ற தமிழ் மக்களின் முகாம்களுடன் ஒபிட்டு முஸ்லிம்களின்  பிரச்சனையை அணுகமுடியாது அப்படியான அணுகு முறைகள் முற்றிலும் தவறானதாகதான் இருக்கம்   தமிழ் மக்களின் பிரச்சனை தனியானது அவர்கள் இறுதி யுத்தத்தின் போது  புலிகளால் பலவந்தமாக அல்லது விரும்பி புலிகளுடன் சென்றார்கள் ஒரு கும்பமாக சென்றவர்கள் உறுபினர்களை இழந்து தொகை குறைத்து     அல்லது வந்த அதே தொகையினர்  மீள் குடியேற்றம் செய்யபடுகின்றார்கள் இது ஒரு குறுகிய  கால இடைவெளியில் நடைபெற்றவை ஆகவே  தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் என்பது வேறு , முஸ்லிம் மக்களின் மீள்  குடியேற்றம்   என்பது முற்றிலும் வேறானது ஆனால் நடைமுறையில் இரண்டு தரப்பினரும் ஒன்றாக பார்க்க படுகின்ற மிகவும் தவறான அணுகு முறைதான் பின்பற்றபடுகின்றது.
இப்போது இருக்கும் மொத்த வட மாகான முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கும் தீர்வு கிடைக்க  கூடிய அரச கொள்கை ஒன்று வேண்டும் 20வருடங்களுக்கு முன்னர் ஒரு வீட்டையும் ஒரு கடையையும் இழந்த ஒருவரின் குடும்பம் இன்று மூன்று குடும்பமாக  இருக்கும் போது  இரு இரு தரப்புக்கும் ஒரு  விதமான மீள்  குடியேற்ற முறை முற்றிலும் தவறானது முஸ்லிம்கள் , சிங்களவர்கள் மீள் குடியேற்றம் பற்றிய அரச கொள்கை ஒன்று உருவாக்கபட வேண்டும் அந்த கொள்கையின் அடிப்படையில்   மீள்  குடியேற்றம்  இடம் பெற வேண்டும் அதுவரை வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்பது அரசியல் வசனங்களாக மட்டுமாகத்தான் இருக்க போகின்றது நான்கு குடும்பமாக இருக்கும் மக்களிடம் ஒரு உடைந்து தகர்ந்து கிடக்கும் ஒரு சிறிய இடத்தை காட்டி இங்கு நீங்கள் வந்து குடியேறுங்கள் உங்களுக்கு 100 வீத பாதுகாப்பை நாங்கள் தருகிறோம் என்றால் அது மீள்  குடியேற்றத்தை செய்வதற்கு போதுமாகாது 20 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் இருந்த இடங்களிலும் அதற்கு சுற்று புறங்களிலும் காணிகள் தெரிவு செய்ப்பட்டு புதிய குடியிருப்புகள் உருவாக்கபடவேண்டும் புதிதாக உருவாகியுள்ள குடும்பங்களுக்கும் , வீடு இல்லாதவர்களுக்கும் அங்கு வீடுகள் கட்டி கொடுக்க படவேண்டும் , தொழில் வசதிகள் செய்து கொடுக்க படவேண்டும் இவை  மட்டும்தான் முஸ்லிம் மீள்  குடியேற்றம் என்பதை சரியாக உருவகப் படுத்த முடியும்


அரசியல் விழிப்புணர்வு அது புத்தளத்தின் அவசரத் தேவை !!




M. ஷாமில் முஹம்மட்
புத்தளம், புத்தளம் தேர்தல் தொகுதி
ஆண்டுவாக்களர்கள்வாக்களித்
தவர்கள்
வாக்களிக்
காதவர்கள்
200082,07757,483- 70.04%24,594
200184,86657,471- 67.72%27,395
200490,00459,934- 66.59%30,070
2010102,64354,899- 53.49%47,744
புத்தளம் இலங்கை முஸ்லிம்களின் முக்கியமான ஒரு பிரதேசம் ஒரு குட்டி முஸ்லிம் தேசம் என்று குறிபிடலாம் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய வாரலாற்று தடையங்கள் , கல்வெட்டுகள் என்பன புத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது இலங்கை முஸ்லிம்களில் தொன்மையை நிரூபிக்கும் வரலாற்று தடையங்கள் கண்டு பிடிக்கபட்ட இடங்களில் புத்தளம் முக்கியமானது புத்தளம் பல வழிகளில் சிறப்பு பெருகின்றது ஒன்று முஸ்லிம்கள் மிகவும் செறிந்து வாழும் பிரதேசம் இரண்டு வடக்கு முஸ்லிம்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பகுதி புத்தளத்தில் இன்று முஸ்லிம்கள் ஒரு லச்சத்தி 50 ஆயிரம் பேர் வாழ்கிறார்கள் என்றால் வடக்கில் இருந்து பயங்கரவாதத்தின் வெறியாட்டத்தால் புத்தளத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் வந்து குடியேறிய வடக்கு முஸ்லிம்கள் இன்று ஒரு லச்சதி 50 ஆயிரம் பேர் வரை வாழ்கிறார்கள் மொத்தமாக 3 லச்சம் வரை முஸ்லிம்களை கொண்ட மாவட்டம் அதிலும் இவர்கள் செறிவாக ஒரு பிரதேசத்தில் இருப்பது மேலும் சிறப்பு புத்தளம் சென்றால் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும் சிறந்த இஸ்லாமிய சூழல் எங்கு சென்றாலும் அழகான கம்பிரமான் மஸ்ஜிதுகள் தொகையான இஸ்லாமிய துடிப்புள்ள முஸ்லிம்கள் என்று பல சிறப்புகளை கொண்டுள்ளது பல இஸ்லாமிய இயக்கங்கள் ஒற்றுமையாக வேலை செய்யும் இடம் இந்த தளம் இஸ்லாமிய துடிப்புள்ள இஸ்லாமிய தெளிவு கொண்ட நகரம் என்று குறிபிடலாம்விரிவாக பார்க்க.. 
ஆனால் அரசியல் என்று வரும்போது அங்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலை அங்கு தொடர்கதை ஒரு முஸ்லிம் பிரதேசத்துக்கு இருக்க வேண்டிய சுமாராக அனைத்து தகமைகளையும் கொண்டுள்ள புத்தளம் முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்களை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் தவறி வருகின்றது
புத்தள முஸ்லிம்கள் தொடர்ந்தும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையை அடைந்துள்ளனர் நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் எவரும் புத்தளத்தில் இருந்து தெரிவு செய்யபடாத நிலை இந்த முறையும் ஏற்பட்டுள்ளது கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் புத்தளத்தில் இருந்து தெரிவு செய்யப்படவில்லை இது புத்தள முஸ்லிம்கள் மத்தியில் ஒரு அரசியல் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது கடந்த காலங்களில் பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவம் சில நூறு வாக்குகளால் தவறியுள்ளது
முஸ்லிம் பிரதிநிதித்துவம் கடந்த காலங்களில் நான்கு தடவைகள் சில நூறு வாக்குகளால் தவறியமையும் கடந்த 33வருடங்களாக புத்தளம் முஸ்லிம் பிரதிநிதி எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்பதும் புத்தள முஸ்லிம் சமூகம் தமது அரசியல் நகர்வுகள் பற்றி சிந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது
புத்தளம் மாவட்டத்தில் 2010 ஆண்டில் வாக்காளர் தொகை 495,575 ஆக பதிவாகியுள்ளது இதில் 280,354 பேர் தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர் அதில் 21,562 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது 215,221-பேர் தமது வாக்குகளை பயன்படுத்தவில்லை ஏனைய 258,792 வாக்குகள் ஏற்கப்பட்டுள்ளது ஆக மொத்த வாக்காளர்களில் 56.57%வீதமானவர்கள் மட்டும் இந்த முறை தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர் இவர்களில் 167,769 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்து 6 ஆசனங்களையும் 81,152 பேர் ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களித்து 2 ஆசனங்களையும் பெறுவதற்கு உதவியுள்ளனர் , ஜனநாயக தேசிய முன்னணி க்கு 8,792 பேர் தமது வாக்குகளை வழங்கியுள்ளனர் மொத்தமாக 495,575 வாக்காளர்களில் 258,792 வாக்குகளை பயன் படுத்தி 8 பாராளுமன்ற உறுபினர்களை தெரிவு செய்யதுள்ளனர் இவர்களில் எவரும் முஸ்லிம்கள் இல்லை ஆக புத்தள மாவட்டம் தனது 258,792 வாக்குகளை மட்டும் பயன்படுத்தி 8 ஆசனங்களை பெற்றுள்ளது 215,221-பேர் தமது வாக்குகளை பயன்படுத்தவில்லை
ஆக 258,792 வாக்குகள் 8 பாராளுமன்ற உறுபினர்களை தெரிவு செய்யது இருக்கிறது என்றால் 62,000 முஸ்லிம் வாக்குகள் சரிவர முழுமையாக பயன்படுத்தபட்டால் இரண்டுக்கு குறையாத முஸ்லிம்  பாராளுமன்ற   உறுபினர்களை பெற்று கொள்ளமுடியும் புத்தளத்தில்  புத்தளம் தொகுதிக்குள் 5,000 வரை தமிழ் வாக்காளர்கள் உள்ளனர் இவர்களுடன் ஒரு புரிதுணர்வு ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களின் வாக்கு வங்கியின் பலத்தை மேலும் அதிகரிக்க முடியும் ஆக இங்கு தேவையானது அரசியல் விழிப்புணர்வு
இங்கு முஸ்லிம் வாக்காளர்கள் பற்றி பார்த்தல் புத்தள மாவட்டத்தின் தலை நகரான புத்தளத்திலும் அதை சூழவுள்ள பகுதிகளிலும் முஸ்லிம்கள் மிகவும் செறிவாக வாழ்கின்றார்கள் இங்கு சுமார் 62ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர் இவர்களின் வாக்குகள் இந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முறையாகவும் , தொகையாகவும் பயன்படுத்தப்படவில்லை சரிவர , தமிழ் சிங்கள வாக்குகளையும் உள்ளடக்கியதாக முழுமையக பயன்படுதபட்டிருந்தால் இரண்டுக்கு குறையாத முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகி இருப்பர் புத்தள முஸ்லிம் வாக்காளர்களை பொறுத்தவரை 35 தொடக்கம் 45 வீதமான வாக்குகள் மாத்திரமே பயன்படுத்தபடுகின்றது என்றும் அதுவும் இரண்டாக உடைந்த நிலையில்தான் வாக்குகள் தொடர்ந்தும் அளிக்கப்பட்டு வருகின்றது என்பதுடன் முஸ்லிம் வாக்காளர்களில் பெரும்பான்மையனவர்கள் தமது வாக்குகளை அளிக்க முன்வருவது மிகவும் குறைவு என்பதும் குறிபிடதக்கது
புத்தளம் மாவட்டம் 5 தேர்தல் தொகுதிகளாக பிரிக்க பட்டுள்ளது இதில் புத்தள தேர்தல் தொகுதியில் 102,643  வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர் இங்கு முஸ்லிம்கள் மிகவும் செறிவாக வாழ்கின்றார்கள் மொத்த புத்தளம் மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களில் 90 வீதமானவர்கள் புத்தள மாவட்ட தலை நகரான புத்தளம் தேர்தல் தொகுதியில் வாழ்கின்றனர் என்பது குறிபிடதக்கது இங்கு இந்த முறை 53.49% வீதமான வாக்குகள்தான் அளிக்கப்பட்டுள்ளது 47,744 வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்தவில்லை
புத்தள மாவட்டம்
ஆண்டுவாக்காளர்கள்வாக்களித்தவர்கள்வாக்களிக்காதவர்கள்
2000412,474301,739-  73.15%110,735
2001426,193304,847-  71.53%121,346
2004450,057311,194-  69.15%138,863
2010495,575280,354-  56.57%215,221
2004ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 450,057 வாக்காளர்கள் பதிவாகியிருந்தனர் இவர்களில் 311,194 பேர் தமது வாக்குகளை பயன்படுத்தியிருந்தனர் அன்றைய வாக்களிப்பு 69.15% வீதமாக பதிவாகியுள்ளது கடந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்த முறை வாக்களிப்பு வீதம் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது
2001 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 412,474 வாக்களர்கள் பதிவாகியிருந்தனர் இவர்களில் 301,739 பேர் தமது வாக்குகளை பயன்படுத்தியிருந்தனர் அன்றைய வாக்களிப்பு 73.15% வீதமாக பதிவாகியுள்ளது 2001 , 2004ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2010 ஆண்டு வாக்களிப்பு வீதம் மிக மோசமாக குறைந்துள்ளது
மக்கள் தொகை அதிகரிக்கும் போதும் , பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொகை அதிகரிக்கும் போதும் வாக்களிப்போர் தொகை அதிகரிக்க வேண்டும் ஆனால் புத்தள மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு மக்கள் தொகை அதிகரிக்கும் போதும் , பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொகை அதிகரிக்கும் போதும் வாக்களிப்போர் தொகை தொடர்ந்தும் குறைந்து செல்கின்றது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு தோல்வி கண்ட முன்னால் பிரதி அமைச்சர் A.K. பாயிஸ் -26,489- வாக்குகளை பெற்றுகொண்டார் இவரின் வாக்குகளில் ஆனமடுவ தேர்தல் தொகுதியில் இவர் 5600 சிங்கள வாக்காளர்களின் வாக்குகளையும் புத்தளம் தேர்தல் தொகுதியில் உள்ள கணிசமான சிங்கள வாக்காளர்களின் வாக்குகளையும் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது இது சாதகமாக பார்க்க பட்டாலும் இவர் கணிசமான முஸ்லிம் , தமிழ் வாக்காளர்களின் வாக்குகளை தவறவிட்டுள்ளார் என்பது குறிபிடதக்கது
இன்று புத்தள முஸ்லிம்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இயக்கம் ஒன்றின் தேவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகின்றது இவர்கள் தமது அரசியல் தேவைகளை முதலில் இனம் காணவேண்டும் அவ்வாறு இனம் காணும் அரசியல் தேவைகளை கட்சி அரசியலுக்கு உட்படுத்தாமல் பொது முஸ்லிம் சமூகத்தின் தேவைகளின் குரலாகஅமைத்து கொள்ளவேண்டும் இந்த பகுதி பிரமுகர்கள் சிலரை சந்தித்து இதுபற்றி பேசியபோது அவர்கள் இதை ஒரு குறையாக குறிபிட்டாளும் இஸ்லாத்தை நேசிக்க கூடிய இஸ்லாமிய நெறிமுறைகளை மதிக்க கூடிய சமுகத்தையும் இஸ்லாத்தையும் அடகுவைக்காத , துணிவுமிக்க , திறமையான ஒருவருக்குதான் புத்தள முஸ்லிம்கள் தமது பூரண ஆதரவை வழங்குவார்கள் என்றும் அந்த தகமைகளை கொண்ட நபரை நாங்கள் இன்னும் கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்கள்
முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கண்டிப்பாக வேண்டும் முஸ்லிம்களின் விடையங்களை முஸ்லிம்கள் பார்க்கும் நிலைதான் என்றும் ஆரோக்கியமானது காலம் சென்ற  அமைச்சர் தசாநாயக்கா மதுரங்குளி போன்ற முஸ்லிம் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியமை குறிபிடதக்கது தற்போதும் மீள் குடியேற்ற அமைச்சராக புத்தளத்தை பிரதிநிதித்துவ படுத்தும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்தான் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிபிடதக்கது
முஸ்லிம்களை செறிவாகவும்  இஸ்லாத்தை  செல்வாக்கு மிக்க சக்தியாகவும் கொண்ட புத்தளத்தின் சிறப்பு தொடர்ந்தும் பாதுகாக்கப்படவேண்டும் எப்போதும் இனவாத சக்திகள் முஸ்லிம்கள் ஒரு பரந்த பிரதேசத்தில்  செறிவாக இருப்பு கொள்வதை விரும்பமாட்டார்கள் புத்தளத்தில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பிளவுகளை மறந்து தமக்குள் ஒன்றிணைய வேண்டும் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் அப்பாட்பட்ட ஒன்றுமை மிகவும் அவசியமானது இவற்றை செய்வதில் இஸ்லாமிய இயக்கங்கள் முன்வரவேண்டும் தமது நீண்ட கால இலக்குகளுடன் இவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும் இது இன்றைய தவிர்க்க முடியாத தேவை.

المشاركات الشائعة