Search This Blog

Jul 31, 2011

இலங்கை முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் நோர்வே பயங்கரவாதி




நோர்வேயில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்ட கிறிஸ்தவ பயங்கரவாதியான பிரிங் தனது 1500 பக்கங்கள் கொண்ட கொள்கை பிரகடனத்தில் இலங்கை முஸ்லிம்களை இலங்கையையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளான் என்று சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அவன் 1500 பக்கங்கள் கொண்ட கொள்கை பிரகடனத்தின் 1235  பக்கத்தில் இலங்கை, ஐரோப்பா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டு என்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளான்.
இதேவேளை நோர்வே கிறிஸ்தவ பயங்கரவாதி இந்தியாவின் இந்து தேசிய பேரினவாத அமைப்புகளை தனது நேச அணியாகப் பாராட்டியுள்ளான். சர்வதேச ரீதியில் ஜனநாயக ஆட்சிகளை வீழ்ச்சியுறச் செய்யும் போராட்டத்தின் முக்கியமான அணியாக இந்து பேரினவாத இயக்கத்தை அவன் புகழ்ந்திருக்கின்றான் The Knights Templar என்ற தனது அமைப்பு ஐரோப்பாவின் அதிகாரத்தை கைப்பற்றி அங்கிருந்து இஸ்லாத்தை துடைத்தெரிவதை நோக்கமாக கொண்ட அமைப்பாக தன்னை அடையாளப் படுத்துகின்றது.
இஸ்ரேலிய சியோனிசத்தை முழுமையாக ஆதரிக்கும் இவன் தமது அமைப்பின் பிரதான நோக்கமாக ‘கிறிஸ்து மற்றும் சாலமன் கோவிலின் படை வீரர்கள் ‘PCCTS (Poor Soldiers of Christ and of the Temple of Solomon) கொண்ட Knights Templar இயக்கத்தை சில சதாப்தங்களில் மேற்கு ஐரோப்பாவின் சக்திமிக்க புரட்சிப் படையாக மாற்றுவதை நோக்கமாக கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.என்பது குறிபிடதக்கது.

Jul 28, 2011

ஆளுக்கொரு நீதி அதுதான் இன்றைய உலக நியதி !!

ஜெஸ்மினா  பாறூக்









பலஸ்தீன் என்ற சுதந்திர நாடு உருவாவதற்கு அமெரிக்கா ஐ.நா. பொதுச் சபையில் ஆதரவு அளிக்கப்போவதில்லை என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதேவேளை  மேற்குலகின் ஆயுதமான கிஸ்தவ மிஷனரி நடவடிக்கைகளின் மூலம் கடந்த ஒரு சனித்தினத்தில்  சூடானில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட  தெற்கு சூடான் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் ஆசீர்வாதத்துடன் “வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், மகிழ்ச்சியானதும்” என பொதுச் சபையின் தலைவர் யோசப் டீஸ் வழிமொழிய வாக்கெடுப்பு எவ்வித எதிர்ப்பும் இன்றி வெற்றிபெற “நல்வரவு, நாடுகளின் கூட்டமைப்புக்கு தெற்கு சூடானை வரவேற்கிறோம்,” என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் வாழ்த்துரைக்க ஐநாவின் 193வது உறுப்பு நாடாக அங்கீகாரம் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாவம்  பலஸ்தீன் மக்கள் பலஸ்தீனர்களின் நாடு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பிசாசுகளின் வன்புணர்சிக்கு உட்டபட்ட திகதி தொடக்கம் இன்றுவரை அரை நூற்றாண்டுக்கு அதிகமான காலமாக பலஸ்தீனர்கள் தமது சொந்த மண்ணில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வெறியர்களினால் அடக்கு முறையின் கீழ் தினமும் வதை பெறுகின்றார்கள்.
குழந்தைகளுடன், உறவுகளுடன்  கூடியிருக்கும் இல்லங்களை இஸ்ரேலிய பேய்கள்  வந்து இடித்து தகர்க்க இவர்கள் இழப்பதும், தவிப்பதும், உம்மா பாண் வான்கிவருகின்றேன் என்று கடை வீதிக்கு வரும் இளசுகள் கொல்லப்படுவதும், வீட்டு அறைகளில் விளையாடும் பிஞ்சு முக மழலைகள் உடல் சிதறி  இறப்பதும், கணவனுடன் படுத்துறங்கும் மனைவியரை வீட்டின் பின்புறம் உடைத்து நுழையும் மிருகங்கள் வதை முகாம்களுக்கு  இழுத்து செல்வதும், முகாம்களில் கேட்பார் எவரும் இன்றி இடிந்து, சிதைந்து, இழந்து உன், என் சகோதரிகள் அரை நூற்றாண்டுகளாக  எம் உலக உறவுகள் காப்பாற்றும் என்று காத்திருக்க.
பலஸ்தீன நிர்வாகம் வரும்   செப்டெம்பர் மாதம்  ஐ.நா. சபையில் பலஸ்தீனை சுதந்திர தனி நாடாக அங்கீகாரம் மற்றும் அங்கத்துவம் கோர தீர்மானித்துள்ளனர் என்ற செய்தியும், ஐ.நா.வுக்கு வெளியில் 120 நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. அந்த நாடுகள ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை 1967ஆம் ஆண்டு எல்லையை தற்போதைய பலஸ்தீன நாட்டின் எல்லைகளாக கொண்டு சுதந்திர நாடக அங்கீகரிக்க தயாராக உள்ளது  என்று பலஸ்தீனர்கள் சுத்திர கனவில் இருக்க.
ரத்து அதிகாரம் என்ற அமெரிக்க ஏகாதிபத்திய ஆயுதம் கொண்டு மீண்டும்  பலஸ்தீன சுதந்திரத்தின் தலையில் கோடரியால் கொத்த போவதாக உறுமுகின்றது. ரத்து அதிகாரம் Vito power கொண்டுள்ள அமெரிக்கா பாதுகாப்பு சபை பிரதிநிதி ரொஸ்மெரி டிகாலோ “இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையாக பலஸ்தீன் தனி நாடொன்றை உருவாக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கப் போவதில்லை. இவ்வாறான பக்கச்சார்பான திட்டத்திற்கு செப்டெம்பரில் மட்டுமல்ல ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனில் மட்டுமல்ல உலகின் பல சிறைகளில் நூற்றுகணக்கான பெண்கள், சித்தரவதைகளை தினமும் அனுபவித்து விடுதலைக்காக காத்திருகின்றார்கள். யார் அவர்களுக்கு உதவுவார் ? துவா மட்டும் தான் எங்கள் ஆயுதம் என்று கூறும் பல துடிப்பான , ஆளுமையுள்ள இளம் ஆண்கள் உண்மையில் துவாக் கூட கேட்காமல் கதை விடுகின்றார்கள் என்பதுதான் உண்மை FACEBOOK, TWITTER ஆகிய சமூக வலைதளங்களில் அவர்களின் கருத்துகளும், செயல்களும் இந்த சந்தேகத்தை எழுப்ப காரணமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் இந்த உலகில், விடுதலை ,சுதந்திரம், சமாதனம் , சகவாழ்வு உதயமாக உழைக்கவேண்டும். இஸ்லாம் என்ற கோபுரத்தை கட்ட ஒவ்வொருவரும் ஒரு கல்லையாவது சுந்தாகவேண்டும். இது ஒரு கடமையும் காலத்தின் கட்டாயமும். ஆளுக்கொரு நீதி என்ற இன்றைய உலக அநீதியை ஒழிந்து அனைவருக்கும் ஒரு நீதி என்ற நீதிகளின் நீதியை நிலைநாட்டவேண்டும்.

-Our Ummah-

Jul 27, 2011

ஈரானில் மற்றுமொரு அணுத்துறை விஞ்ஞானி படுகொலை: ஒரு தகவல்

M.ஷாமில் முஹம்மட்:




கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்று கிழமை  ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணு விஞ்ஞானிகள் படுகொலை வரிசையில் மற்றுமொரு இளம் அணுத்துறை விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 35 வயதான டாரிஷ் ரிஷாநஜாத் -Darioush Rezainejad- என்ற இளம் அணுவாயுத விஞ்ஞானி தெஹ்ரானில் கிழக்கு பகுதியில் தனது மகளை கல்லூரி ஒன்றிலிருந்து அழைத்து வர சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரின் மனைவியும் படுகாயமடைந்துள்ளார்.
ஈரான் அணு உற்பத்தி திட்டத்துடன் தொடர்பை கொண்டிருக்க கூடியவரான டாரிஷ் ரிஷாநஜாத் படுகொலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகள் தொடர்பு பட்டிருப்பதாக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் அமெரிக்கா, மற்றும் இஸ்ரேல் ஈரானின் அணு மேன்பாட்டு திட்டத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டு அணு விஞ்ஞானிகளை படுகொலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஈரானில் தொடராக அணுத்துறை விஞ்ஞானிகள் மர்மமான முறையில் தொடராக  படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில். கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி காலையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஈரானிய அணுசக்தித்துறை முக்கிய விஞ்ஞானி டாக்டர் மாஜித் ஸஹ்ரீரி படுகொலை செய்யப்பட்டார். அதேகால பகுதியில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மற்றுமொரு முக்கிய அணுத்துறை விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான கலாநிதி பரிதூன் அப்பாஸி படுகாயமடைந்தார். இவர்கள் இருவரின் கார்கள் மீதும் மோட்டார் சைக்கிளில் அருகில் வந்த நபர்களினால் குண்டுகள் பொறுத்தப்பட்டு இவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டது என்பது குறிபிடத்தக்கது. இதே வழிமுறையை பின்பற்றித்தான் டாரிஷ் ரிஷாநஜாத் மீதும் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று அதேவருடம் -12.01.2010- அன்று அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதி குண்டு வெடிப்பொன்றில் படுகொலைசெய்யப்ட்டார் இந்த கொலைகளுக்கு அமெரிக்காதான் காரணம் என்று ஈரான் தெரிவித்திருந்தது. என்பதும் குறிபிடத்தக்கது. இது பற்றி ஈரான் அறிவியல் துறை அமைச்சர் கைதர் மொஸ்லேஹி அன்று கருதுரைகையில் ஈரான் இஸ்லாமிய குடியரசை அழிக்க அமெரிக்காவை தளமாக கொண்ட 80 அமைப்புகள் இயங்குவதாகவும் வருடம் ஒன்றுக்கு அமெரிக்கா அவற்றுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை- வழங்கிவருவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது. இந்த தகவல்கள் மேற்கின் பயங்கரவதத்தை புரிந்துகொள்ள உதவும்.

-OurUmmah-

பிரிட்டன் இனவாத முன்னணியான EDL பயங்கரவாதத்துடன் தொடர்பு


M.ரிஸ்னி முஹம்மட்: நோர்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐரோப்பாவை உலுக்கிய மனித படுகொலை பயங்கரவாத தாகுதல்களில்   மேற்கு நாடுகளில் பல காலம் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்பு பற்றிய தகவல்கள் ஆதர பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் பல மேற்கு ஆய்வளர்கள் அப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்பதாகன ஆதாரம் எதுவும் இல்லை என்று எந்த ஆய்வுகளும் இன்றி தெரிவித்து வருகின்றனர்.
ஆனால்பயங்கரவாதம் மற்றும் பிரிட்டன் வலது சாரி தீவிரவாதம் தொடர்பான நிபுணரும் பேராசிரியருமான  மார்டின், -Martin Feldman-  எமது ரேடாரில் இந்த அமைப்பு  சிறிதாக தெரிந்தாலும் இதன் இருப்பை மறுக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார்
இந்த பயங்கரவாத சிந்தனை போக்கு நன்கு திட்டமிட்ட முறையில் மேற்கு முழுவதும் பரவியிருப்பதாக பல பொது ஆய்வளர்கள்  தெரிவிக்கும் அதேவேளை பயங்கரவாதம் என்ற பெயரில் இஸ்லாத்தை குறிவைத்து செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள் தனது சொந்த தேசங்களில் , தமக்கு அருகில் பலமாக வளர்ந்து வரும் பயங்கரவாதம் பற்றி அக்கரை இன்றி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை பிரிட்டனில் செயல்படும் ஆங்கிலேயர் பாதுகாப்பு முன்னணி EDL அமைப்பு மக்கள் மத்தியில் இனவாதம் , வன்முறை ஆகியவற்றை துண்டிவிடுகின்றது என்ற பலமான குற்றசாட்டு எழுந்துள்ள.  இந்த அமைப்பை மேற்கு ஐரோப்பாவுக்கு ஒரு அருள் என்று நோர்வே கொலையாளி குறிபிட்டுள்ளான். கொலையாளி மேலும் தனது The Knights Templar இயக்கத்தில் இருந்து 80 வரையானவர்கள் இவ்வாறான தாக்குதல்களுக்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்துரைத்துள்ள EDL இயக்கத்தின் தலைவர் ஒஸ்லோ பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கும் தமது இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆனால் இதுபோன்ற பல சம்பவங்கள் பிரிட்டனில் எதிர்வரும் ஐந்து வருடங்களுள் நடைபெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நோர்வே கொலையாளி   இந்தியாவின் இந்து  தேசிய பேரினவாத அமைப்புகளை தனது  நேச அணியாகப் பாராட்டியுள்ளான். சர்வதேச  ரீதியில் ஜனநாயக ஆட்சிகளை  வீழ்ச்சியுறச் செய்யும் போராட்டத்தின் முக்கியமான அணியாக இந்து பேரினவாத இயக்கத்தை அவன் புகழ்ந்திருக்கின்றான்  The Knights Templar  என்ற அந்த  அமைப்பு ஐரோப்பாவின் அதிகாரத்தை கைப்பற்றி அங்கிருந்து இஸ்லாத்தை துடைத்தெரிவதை நோக்கமாக கொண்ட அமைப்பாக தன்னை அடையாளப் படுத்துகின்றது. EDL என்ற தீவிரவாத இயக்கம்  பிரிட்டனில் இஸ்லாத்தை அதன்  ஷரியாவை தகர்த்தெறியும் நோக்கம் கொண்டு உருவாக்க பட்டுள்ள இயக்கம் என்பது குறிபிடத்தக்கது.
நோர்வே கொலையாளி  2002 இல் லண்டனில் இதன் உருவாக் கூட்டத்தில்   பிரிட்டன், நோர்வே ,பிரான்ஸ் ,ஜெர்மன் , கிரீஸ் , நெதர்லாந், ரஷ்யா, செர்பியா  ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கு பற்றியதாகவும் ஆனால் சுவிடன், பெல்ஜியம் , மேற்கு அமெரிக்க ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பங்குகொள்ள முடியாது போனதாகவும் அந்த சந்திப்பை   ஆங்கில புரடஸ்தாந்து  கிஸ்தவர் ஒழுங்கு செய்திருந்ததாகவும்  தெரிவித்துள்ளான்.
தமது பிரதான நோக்கமாக  ‘கிறிஸ்து மற்றும் சாலமன் கோவிலின் படை வீரர்கள் ‘PCCTS (Poor Soldiers of Christ and of the Temple of Solomon) கொண்ட   Knights Templar இயக்கத்தை சில சதாப்தங்களில் மேற்கு ஐரோப்பாவின் சக்திமிக்க புரட்சிப்  படையாக  மாற்றுவதை நோக்கமாக கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
இந்த கொலையாளியின் பிரகடனத்தில் பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் இனவாத இஸ்லாமிய விரோத சிந்தனை கொண்ட அரசியல் கட்சியான EDL பற்றி அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது . அந்த கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவரினால்தான் இந்த  ‘கிறிஸ்து மற்றும் சாலமன் கோவிலின் படை வீரர்கள்’ கொண்ட  Knights Templar இயக்கம் உருவாக்கப் படுவதாக தான் திடமாக நம்புவதாகவும் கொலையாளி தெரிவித்துள்ளான்.
பயங்கரவாதம் மற்றும் வலது சாரி தீவிரவாதம் தொடர்பான பேராசிரியர் மார்டின் Martin Feldman  ரேடாரில் இந்த அமைப்பு  சிறிதாக தெரிந்தாலும் இதன் இருப்பை மறுக்கமுடியாது, எச்சரிக்கையாக இருக்கவேண்டிய பக்கத்தில் தவறு நடகின்றது  “Err of the side of caution” என்றும் தெரிவித்துள்ளார்.
கொலையாளி பெரிவிக் -Anders Behring Breivik- என்ற  தான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்  வெறுக்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதி என்பதை ஒப்புக்கொண்டுள்ள அதேசமயம், தனது “சிலுவைப் போர்’ அமைப்புக்கான இலச்சினைகளைத் தயாரிப்பதற்கு இந்திய கலை நிறுவனம் ஒன்றை அவர் தெரிவு செய்துள்ளான்.
 Knights Templar இலச்சினையானது வெள்ளை மண்டையோட்டின் நெற்றியில் இஸ்லாம், கம்யூனிஸம், நாஸிசம் ஆகியவற்றைக் குறித்துக் காட்டுவதாக குறிகள் பொரிக்கப்பட்ட  மண்டையோட்டை கிறிஸ்தவ சிலுவையை குறிக்கும் வால் ஊடறுத்து செலுத்தப்படிருப்பது  காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த இலச்சினையை ஒரு இந்திய முஸ்லிம் நபர் தொழிலுக்காக அந்த விடயங்களை பற்றி  தெரியாத நிலையில் அதை உருவாக்கி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
“2080: சுதந்திரத்துக்கான ஐரோப்பியப் பிரகடனம்’ 1500 பக்கங்கள் கொண்ட அந்த விஞ்ஞாபனத்தில் 102 பக்கங்களில் இந்தியா தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது Knights Templar  இந்திய தேசியவாதிகளுக்கும் ஆதரவளிப்பதாக தனது விஞ்ஞாபனத்தில் பெரிவிக் கூறுகிறான். இவன் தனது கொள்கை உரையில்   இந்து தேசியவாதிகள் தமது ஐரோப்பிய மச்சான்மார் போன்றே இந்திய கலாசார மார்க்சிஸ வாதிகளினால் இந்துத் தேசியவாதிகள் துன்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளான்.
இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கமானது முஸ்லிம்களை சாந்தப்படுத்துவதில் சார்ந்திருப்பதாகவும் துன்பகரமான முறையில் கிறிஸ்தவ மிஷனரிகளை நெருக்கடிக்குள்ளாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளான். தாழ்ந்த மட்ட இந்துக்களை சட்டவிரோதமாக மதம் மாற்றுவதாக கிறிஸ்தவ மிஷனரிகள் மீது நெருக்குதல் கொடுப்பதாகவும் அதேசமயம், இந்து நம்பிக்கை கலாசாரத்தை முழுமையாக அழிக்க கம்யூனிஸ்ட்டுகள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளான்.

-lankamuslim-

Jul 25, 2011

ஒஸ்லோ தாக்குதலுக்கு பின்னால் நைட்ஸ் டேம்பளர் என்ற பயங்கரவாத அமைப்பு


 நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் மத்திய பகுதியில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து 20 மையில் துரத்தில் அமைந்துள்ள தீவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்துள்ளனர். இவற்றுக்கு பின்னால் ஐரோப்பாவை இணைக்கும்  கிஸ்தவ வலது சாரி பயங்கரவாதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலை நடத்திய Anders Breivik என்ற பயங்கரவாதி ஒரு கடும்போக்கு கிஸ்தவ அடிப்டைகொண்ட வலதுசாரி இரகசிய அமைப்பு ஒன்றை சார்ந்தவன் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 
Anders Breivik தனது பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்த முன்னர் நைட்ஸ் டேம்பளர் என்ற தான் சார்ந்த இரகசிய அமைப்பின் 1500 பக்கங்கள் கொண்ட “2083 – A European Declaration of Independence,” என்ற தலைப்பிலான கொள்கை பிரகடனம் ஒன்றை  பின்லாந்தின் வலதுசாரிக் கட்சியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அந்த கொள்கை பிரகடனம் ஒன்பது வருடங்களாக அவனும் அவனின் இயக்கம் உறுபினர்களும் இணைந்து தயாரித்துள்ளனர் என்று நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றது .
அதனை   20 நிமிட வீடியோ பதிவாகவும் அனுப்பியுள்ளான். அதன் மிகவும் சுருக்கமாக வீடியோ ஒன்றும் Youtube பில்  பதிவு செய்யப்பட்டுள்ளது . ஐரோப்பாவில் இஸ்லாமிய மயமாக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், மார்க்சியர்களுக்கும் எதிராக புனித சிலுவை போரை ஆரம்பிக்க உருவாக்கப்பட்ட இரகசிய அமைப்பொன்றின் தகவல்களாக அது வெளிவந்துள்ளன.
கொள்கை பிரகடத்தில் 2083 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐரோப்பா சர்வவல்லமை கொண்ட வெள்ளையரின் சாம்ராஜ்யமாக தமது பயங்கரவாத தாக்குதல்களின் ஊடாக உருவாக்கப்படும். அதன் முதல் படியாக   ஐரோப்பாவை அழித்து கொண்டிருக்கும் தற்போதைய இடது சாரி சிந்தனை கொண்ட அரசுகள் அழிக்கப்படும். அதன் மூலம்  ஐரோப்பா இஸ்லாமிய பயமாவது தடுக்கப்படும்.   அதை தொடர்ந்து இஸ்லாத்தின் மீதான சிலுவை போர் ஒன்று பிரகடனமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
அந்த பிரகடனம்  2002 இல் லண்டனில் நிறுவப்பட்ட Knights Templar என்ற    ஒரு இரகசிய பயங்கரவாத அமைப்பு பற்றி கூறுகின்றது , அந்த அமைப்பின் ஒன்றுகூடல் ஒன்றுக்கு ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்து 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். “பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது. இனிமேல் ஆயுதப்போராட்டமே ஒரே வழி. உலகம் என்னை இப்போது ஒரு பயங்கரவாதியாக கணிக்கலாம். ஆனால் சில காலத்தின் பின்னர்  மக்கள் என்னை நியாயத்திற்காக போராடிய தியாகியாக மதிப்பார்கள்.”
இவ்வாறு அந்தக் பயங்கரவாதியின் பிரகடன செய்தி அமைந்துள்ளது. பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் ஐரோப்பிய அரசுகளை கவிழ்ப்பதும்,  இஸ்ரேலுக்கு உதவுவதும், முஸ்லிம்களை ஐரோப்பாவை விட்டு விரட்டுவதும் அந்த இரகசிய அமைப்பின் நோக்கமாக குறிபிடப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாதி ஒருதனி மனிதன் அல்ல இது ஒரு சிந்தை போக்கு  இதன் பின்புலத்தில் பல சக்திகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 93 பேரை கொன்றதாக இவன் குற்றவாளியாக நீதிமன்றத்தால் உறுதிப்படுத்த பட்டால் இவன் 21 வருடங்கள் மட்டும் தண்டனை பெறுவான் என்று தெரிவிக்கப்படுகின்றது.

-Lankamuslim-

மரணித்து போய்விட்ட சீன மனிதம் : சிறுவன் வதைக்கப் படும் கொடூரக் காட்சி




பூகோள கிராமம் என்று வர்ணிக்கப் படும் மிக விரைவான தகவல் பரிமாற்ற உலகில் நாம் வாழ்கின்றோம். உலகின் ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு சிறு சம்பவம் நடைபெற்றாலும் உடனடியாக உலகின் அடுத்த பகுதியில் இருப்பவர்களுக்கு  அந்த தகவல் சென்றுவிடும் என்று நாம் கூறினாலும் இன்றும் உலகின் பல பாகங்களில் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளனர்.
அவர்கள் பற்றிய செய்திகள் வெளியில் வராமல் அந்த தேசங்களின் அரச இயந்திரங்கள் அந்த மக்களை கடுமையான அடக்கு முறைக்குள் ஒடுக்கி வைத்துள்ளது. அவ்வாறு அடக்கு முறையை மேற்கொண்டு வரும் நாடுகளில் ஒன்றுதான் சீனா. சீனா சிங்கியாங் என்று சொல்லும் கிழக்கு துருக்கி தேசம் 1949 இல்  கம்யூனிச சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்டது. அன்றில் இருந்து கிழக்கு துருக்கி முஸ்லிம்கள் தம்மை அடக்கு முறைகளில் இருந்து விடுவிக்க போராடி வருகின்றனர். சீனா அதன் மக்கள் தொகையில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மை உய்க்ஹூர் -Uyghur- முஸ்லிம்களை அதன் நகரங்களில் சிறுபான்மையாகியுள்ளது.
அவர்கள் சீனாவின் அடக்கு முறைகளுக்கு எதிராக அணிதிரளும் ஒவ்வொரு தடவையும் அவர்களை மிகவும் மோசமாக ஒடுக்கி வருகின்றது. அந்த தேசத்தின் உய்க்ஹூர் முஸ்லிம் மக்கள் பலமான ஒடுக்கு முறைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். சிங்கியாங்கை ஆக்கிரமித்து நிற்கும் சீனர்கள் உய்க்ஹூர் இன சிறுவன் ஒருவனை கதரக் கதர தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு ஒன்று கடந்த21 ஆம் திகதி Youtube.com பில் பதிவு செயப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவு உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வீடியோ பதிவை இங்கு தருகின்றோம்.

Jul 21, 2011

சோமாலியாவில் அமெரிக்காவின் புதிய வதை முகாம்




அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான CIA தீவிரவாத எதிர்ப்பு நோக்கங்களுக்காக சோமாலியாவை பயன்படுத்துவதாகவும் சோமாலியா தலை நகரில் ஒரு இரகசிய சிறையை கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவில் வெளிவரும் TheNation என்ற சஞ்சிகை தெரிவித்துள்ளதாக AFP தெரிவிக்கின்றது.
அந்த சஞ்சிகை தெரிவித்துள்ள தகவலில் அமெரிக்க மத்திய புலனாய்வு ஏஜென்சி சோமாலியாவில் கடற்கரை பகுதியில் பல சுற்று சுவர்களினால் சுற்றிவளைக்கப்பட்ட பல கட்டடங்களை அதன் உள்பகுதில் கொண்ட பலமான சிறைச்சாலை ஒன்றை இரகசியமாக இயக்கிவருவதாக் தெரிவிக்கின்றது.
அந்த சஞ்சிகை தெரிவித்துள்ள தகவலின் படி இந்த சிறை தொகுதிக்குள் தனியான விமான நிலையமும் உள்ளதாகவும் அந்த சிறை தொகுதியை சூழ பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.விரிவாக
அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக இருந்தது முன்னர் அம்பலமாகிமையும் குறிபிடத்தக்கது.
பயங்கரவாதம் பயங்கரவாதம் என்று கூச்சல் போடுகிற அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட சர்வதேச  தரத்தில் சட்டவிரோத பயங்கரவாத  நடவடிக்கைகளை கொண்டுள்ளமை பற்றிய தகவல்கள்   தடவைகள் வெளிவந்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIAயின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 14 நாடுகள் உதவியாக இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியது.
சுவிஸ் செனட்டர் டிக் மார்ட்டி நடத்திய ஏழு மாத புலனாய்வின் பின்னர் மேற்கின் இரகசியம் வெளிவந்தன. எந்த எந்த வான்பாதையூடாக கைதிகளை  வதைமுகாம்களுக்கு அமெரிக்கா விமானங்கள் ஏற்றி வந்தன. என்பதையும் அதற்கான செய்திமதிப் புகைப்படங்களையும் கைதிகளின் வாக்குமூலங்களையும் வெளியிட்டார்.
இந்த சதியில் ஸ்பெயின், ஜேர்மனி, சைப்ரஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் கீர்ஸ் ஆகிய நாடுகள் பாரிய பங்காற்றியிருப்பதாகவும் மார்ட்டியின் அறிக்கை தெரிவித்தது.
சுவீடன், இத்தாலி, போஸ்னியா, மாசிடோனா ஆகிய நாடுகளில் தங்களது சொந்த மண்ணிலிருந்து மக்களை அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்துள்ளன. என்றும்.
போலந்து மற்றும் ருமேனியாவில் அமெரிக்க புலனாய்வுத்துறையின் இரகசிய வதைமுகாம் இருப்பதையும் இந்த அமைப்பின் அறிக்கை உறுதி செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், ஆப்கான் மற்றும் தாய்லாந்தில் இத்தகைய முகாம்களை அமெரிக்கா அமைத்திருப்பதாக வாசிங்கடன் போஸ்ட் தெரிவித்திருந்தது. தற்போது வெளியாகியிருக்கும் அமெரிக்காவின் சோமாலிய வதை முகாம்கள் பற்றிய செய்தி புதியவையாகும்.

-Ourumah-

Jul 20, 2011

காஸா:பிரெஞ்சு நிவாரண கப்பலை இஸ்ரேல் சிறைபிடித்தது

காஸ்ஸா:தன்னார்வத் தொண்டு ஊழியர்களுடன் காஸ்ஸாவில் இஸ்ரேலின் தடையினால் அவதியுறும் மக்களுக்கு உதவியளிக்க நிவாரணப்பொருட்களுடன் புறப்பட்ட பிரெஞ்சு கப்பலை இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்துள்ளது.


கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் வைத்து இந்த சிறிய கப்பலை இஸ்ரேலிய ராணுவம் சிறைபிடித்து அஷ்தோத் துறைமுகத்திற்கு கொண்டுசென்றதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

ஆனால், இஸ்ரேலின் அடாவடி ராணுவ நடவடிக்கையில் கப்பலில் பயணித்த தன்னார்வ தொண்டர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் சம்பவித்தது குறித்து தகவல் இல்லை.

காஸ்ஸாவிற்கு நிவாரணப்பொருட்களுடன் வந்தால் கைதுச்செய்வோம் என ஏற்கனவே இஸ்ரேல் மிரட்டியிருந்தது. கப்பல் தற்போது இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி அல்ஜஸீரா கூறுகிறது. ஆனால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து கப்பலை இஸ்ரேலிய ராணுவம் சிறைப்பிடித்ததாக காஸ்ஸா உதவிக்குழுவின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தன்னிடமிருக்கு பலத்தின் மொழியில் இஸ்ரேல் பேசுவதாக அமைப்பாளர்கள் அசோசியேட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளனர். ராணுவம் சிறைபிடித்ததையடுத்து கப்பலில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இஸ்ரேலின் நடவடிக்கையை காஸ்ஸாவில் ஹமாஸ் அரசு கண்டித்துள்ளது. ராணுவத்தின் கட்டளையை மீறியதால் கப்பலை சிறைபிடித்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

இரண்டாவது ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா மிஷனில் 10 கப்பல்கள் புறப்பட்டன.இக்கப்பல்களை இஸ்ரேலின் மிரட்டலையடுத்து க்ரிஸ் நாடு தடுத்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் காஸ்ஸாவிற்கு புறப்பட்ட துருக்கி கப்பலை தாக்கிய இஸ்ரேல் ராணுவம் ஒன்பது தன்னார்வ தொண்டர்களை அநியாயமாக படுகொலைச் செய்தது.

மும்பாய் குண்டுகளின் சொந்தக்காரர்கள்

M.ஷாமில் முஹம்மட்
மும்பாய் குண்டுவெடிப்புக்கு CIA காரணமாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பையில்மூன்று இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 19 பேர் பலியாகியும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு வழமை போன்று இந்திய முஸ்லிம்களுக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அரச அதிகாரிகள் ,தனியார் , மற்றும் அரச ஊடகங்கள் குண்டு வெடிப்புக்கு பின்னால் முஸ்லிம் அமைப்புகள் இருப்பதாக சம்பவம் நடந்த சில நிமிடங்கள் தொடக்கம் எந்த ஆதாரங்களும் இன்றி குற்றம் சாட்ட தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் CIA பிராந்தியத்தில் புதிய நகர்வுகளை செய்யவேண்டிய நிலையில் உள்ளதாகவும் அதனால் மும்பாய் குண்டுகளின் பின்னால் அமெரிக்க உளவு அமைப்பான CIA யின் கரங்கள் இருக்கலாம்  என்றும் இதன் மூலம் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மேலும் அழுத்தங்களை வழங்க தேவையான வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி அப்துல் கையூம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் தொடர்பையும் இதில் மறுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உஸாமாவின் மறைவிடம் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய இரகசிய தாக்குதல், அமெரிக்கப் படையின் இரகசிய ட்ரோன் விமான தாக்குதல்கள், பாகிஸ்தான் தேசத்தில் அமெரிக்கா அளவு கடந்த அடாவடித்துடன் பாகிஸ்தானின் இறைமையை மீறி செயல்பட்டு வருகின்றமை, பாகிஸ்தான் மக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான மனநிலையை மேலும் வலுவாக்கியுள்ளது. இது உள்நாட்டு அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கண்ட பாகிஸ்தான் அரசாங்கம், அமெரிக்காவின் பல நடவடிக்கைகளுக்கு கட்டுபாடுகளையும் , எச்சரிக்கைகளையும் தெரிவித்தது.
அதில் ஒரு அங்கமாக பாகிஸ்தான் படைகளுக்கு பயிற்சி வழங்கிவரும் அமெரிக்க இராணுவ பயிற்சியளர்களில் 100 பேரை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதை தொடர்ந்து அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆண்டு தோறும் வழங்கி வரும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் இராணுவ நிதியுதவியை நிறுத்துவதற்கு, பெரும்பாலும் ரத்து செய்வதற்கு முடிவு செய்தது.
அதை தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் மத்தியில் ‘அமெரிக்காவின் யுத்தத்தை பாகிஸ்தான் நடாத்த தேவை இல்லை’ என்ற கருத்து மேலும் மேலும் வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையிலேயே மும்பாய் நகரில் குண்டுகள் வெடித்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்கா தனது யுத்தத்தை செலவுகள் இன்றி பாகிஸ்தானில் நடாத்த, பாகிஸ்தான் அரசாங்கத்தை அழுத்த சந்தர்பம் ஒன்றை ஏற்படுத்துவதாக பார்க்கப் படுகின்றது.
பாகிஸ்தான் , ஆப்கான் மீதான அமெரிக்க பிடி தளர்த்தப்படுவது, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் புதிய வியூகம் ஒன்றை உருவாக்க தேவையுள்ளது என்பதை காட்டுகின்றது. இந்திய உளவு அமைப்பு ‘றோ’ இந்த குண்டுகளை வெடிக்க செய்துவிட்டு அதன் அறுவடைக்காக காதிருப்பதாகவும் பார்க்க முடியும். பாகிஸ்தான் மீதான இந்தியாவின் பிடி தளர்த்தப்படுவதும். அமெரிக்கா விரைவாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற போவதாக அறிவித்து அதன் அடிப்படையில் நகர்வதும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் உளவு துறையினர் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருத முடியும்.
அமெரிக்கா பிராந்தியத்தில் தனது பிடியை தளர்த்தும் தீர்மானம் சீனா அந்த இடங்களை கண்டிப்பாக பிடித்து கொள்ளும் என்ற நியாயமான பயத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சீனா ஆப்கானிஸ்தானில் மிகவும் பாரிய முதலீடுகளை செய்து வருகின்றது. தற்போது அந்த முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆப்கானின் தொலைத் தொடர்பு , நில வளம் ஆய்வு, அகழ்வு ,போன்ற துறைகளிலும் சீனா கால்பதித்துள்ளது ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் தற்போது சீனா செய்துவரும் முதலீடுகள்தான் மிக பாரியது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆண்டு தோறும் வழங்கி வரும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் இராணுவ நிதியுதவியை நிறுத்துவதற்கு, பெரும்பாலும் ரத்து செய்வதற்கு முடிவு செய்துள்ளமை. பாகிஸ்தானில் மேலும் சீனாவின் கால்கள் பதிய வாய்ப்பை பெற்றுகொடுக்கும் என்று இந்தியா கருத இடமுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க வெளிநாட்டு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கான மிக முக்கிய விஜயம் ஒன்றை மேற்கொள்ள இருக்கின்றார் என்ற அறிவித்தல் வெளியானது. இதன் பின்னர் இந்த குண்டுகள் வெடித்தன. என்பது அவதானிக்க படவேண்டும் குண்டுகள் வெடித்து 20 பேர் வரை கொல்லபட்ட பின்னர் நேற்று 18.7.2011 ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்தடைந்தார். இவர் தனது குழுவுடன் இன்று 19.7.2011 இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோருடன் மிகவும் இரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளார். அந்த இரகசிய பேச்சு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தொடர்பானது என்று மட்டும் அறிவிக்கபட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது .
இந்த குண்டு வெடிப்புகள் அமெரிக்க , இந்திய இராஜதந்திர பேச்சில் பிரதான இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை , குண்டு வெடிப்பினால் ஏற்படுதபட்டுள்ள நிலை இந்தியாவின் வலுவான  இராஜதந்திர நகர்வுகளுக்கு அமெரிக்காவின் உதவிகளை பெற வாய்ப்புகளை திறந்து கொடுத்துள்ளது .
அதேவேளை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய்சிங் மும்பை குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் – இந்து பயங்கரவாத அம்மைப்பு- இயக்கத்துக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது என்றும் இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு குறித்த ஆதாரங்கள் தம்மிடம் இல்லை என்றாலும் பயங்கரவாத நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் மற்றும் CIA அமெரிக்க உளவு அமைப்புக்கும் உள்ள உறவுகள் பற்றி பலமான சந்தேகம் கொண்ட செய்திகள் வெளியானமை குறிபிடத்தக்கது.
இந்திய உளவு அமைப்பான ‘றோ’ ஹிந்து பயங்கரவாத அமைப்புகளை தனது தேவைக்கு பயன்படுத்தாது என்று கூறுவதற்கு முடியாது. காரணம் இலங்கை , மாலைதீவு , பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஆயுத குழுக்களை பயன்படுத்தி தனக்கு தேவையான அரசியல் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள அழிவு நாசவேலைகளை துண்டிவிட்டுள்ளது. என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன. இதனால் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டும் உள்ளனர் .
இலங்கை இந்தியாவுடன் முரண்பட்ட நகர்வுகளை வெளிப்படுத்திய போது இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளார்களும், இந்திய உளவுத் துறையான ‘றோ’வும் இலங்கை விடயத்தில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை பயன்படுத்தி இலங்கையில் தமிழ் ஆயுத போராட்டத்தை உருவாக்க தேவையான உதவிகளை செய்துவந்துள்ளது. பொருளாதார , இராணுவ உதவிகளை தேவையான போது வழங்கிவந்துள்ளது.தனது நலனை பாதுகாக்க இந்தியா மற்றவரின் நிம்மதியை, அமைதியை குழப்ப தயக்கம் காட்டவில்லை . புலிகள் மிகவும் பலவீனமாக இருந்தபோது அன்று தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த எம் . டி. ராமசந்திரன் பெரும் தொகை பண உதவி, ஆயுத உதவிகளை செய்து புலிகளை வளர்த்தார் என்பதை பிரபாகரனே தெரிவித்துள்ளார். அந்த உதவிகள்தான் தம்மை மிகவும் பலமான சக்தியாக வளர்த்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று 1988 நவம்பர் மாதம் மாலைதீவு PLOT என்ற இலங்கை தமிழ் ஆயுத போராட்ட அமைப்பால் பகுதியளவில் கைப்பற்றபட்டது. மாலைதீவு ஜனாதிபதி உலக நாடுகளில் உதவியை கோரினார். காத்திருந்த இந்தியா உடனடியாக விரைந்தது காப்பாற்றுவது போன்று காப்பாற்றி தனது பிடியில் மாலைதீவை வைத்திருக்க பல ஒப்பந்தங்களை செய்து கொண்டது. அந்த PLOT என்ற உமா மகேஸ்வரன் தலைமயிலான தமிழ் ஆயுத போராட்ட அமைப்பு இந்தியாவினால் , இந்தியா உளவு அமைப்பான ‘றோ’ வினால் வளர்க்கப்பட்ட அமைப்புத்தான் என்பது குறிபிடதக்கது.
இந்தியா, அன்று மாலைதீவை தனது வலுவான பிடியில் வைத்துகொள்ள ஆடிய நாடகமாகத்தான் அது பார்க்கப்பட்டது. Operation Cactus – Maldives, 1988 இந்த நடவடிக்கையில் சிக்கிகொண்ட PLOT உறுப்பினர்கள் சிலருக்கு மாலைதீவு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது ஆனால் இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக அந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
அதேபோன்று பங்களாதேஷ் ,நேபாளம் மற்றும் பூட்டான் ஆகியனவும் இந்தியாவின் பிடியில் இருந்த இருக்கும் நாடுகள்தான் இவற்றை தனது பிடியில் வைத்திருக்க பல அரசியல் , பொருளாதார . ஒப்பந்தங்கள் , இராணுவ நடவடிக்கைகள் என்பனவற்றை மேற்கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ்சை பிரிக்க இந்தியா பெரிய பங்காற்றியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து பிரிவினை கோரி ஆர்பாட்டங்களையும் பின்னர் ஆயுத போராட்டத்தையும் உருவாக்கவும் வளர்க்கவும் இந்தியா பகிரங்கமாக செயல்பட்டுள்ளது.
இறுதியாக பங்களாதேஷ், பாகிஸ்தானில் இருந்து பிரிந்தது. பிரிக்கப்பட்ட பங்களாதேஷ் இந்தியா சார்பான போக்கையே கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதேபோன்று இந்தியா. பூட்டானை அதன் வெளிநாட்டு கொள்ளை , மற்றும் பாதுகாப்பு விடையம் இவற்றில் இந்தியாவின் அனுமதி இன்றி எந்தவென்ரையும் சுயமாக செய்ய முடியாத படி தனது பிடியில் வைத்துள்ளது. இதற்கு 2007 ஆண்டு கைச்சாத்தான பூட்டான் , இந்திய உடன்படிக்கை சிறந்த உதாரணமாகும்.
இந்தியாவில் குண்டுகளுக்கு பின்னால் ஹிந்து பயங்கரவாமும் , இந்திய இராணுவ அதிகாரிகளின் உதவியும் செயல்பட்டு வந்துள்ளமை ஆதார பூர்வமாக இனம் காணப்பட்டுள்ளது. பல தொடர் குண்டு வெடிப்புகளிலும் முஸ்லிம் படுகொலைகளிலும் ஹிந்து பயங்கரவாதம் ஈடுபடுவது சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த விடயமாக இன்று இருந்தாலும் அவர்கள் எவரும் தண்டிக்கப் படுவதில்லை. ஆதார பூர்வமாக சாட்சிகளுடன் பல வழக்குகள் இந்தியா நீதி மன்றங்களில் தேங்கி கிடக்கின்றது. ஆனால் அவை விசாரிக்க படுவதில்லை விசாரணைக்கு வந்தாலும் தீர்ப்புகள் வருவதில்லை, தீர்ப்புகள் வந்தாலும் அவை உண்மையான தீர்ப்பாக இருப்பதில்லை என்ற நிலைதான் இந்தியாவில் இருக்கிறது. இதை சாதாரன ஒரு நிகழ்வாக கொள்ளமுடியாது இதற்கு பின்னால் மிகவும் பாரிய சக்தி இருப்பது மிகவும் தெளிவாக தெரிகின்றது.
இதில் மற்றுமொரு பக்கம் இருப்பதையும் மறுக்க முடியாது அதாவது பாகிஸ்தான் இந்தியா உறவில் ஏற்படுத்தப்படும் வலுவான பிளவுகளின் ஊடாக சீனா தனக்கு சாதகமான நிலையை பிராந்தியத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாகும். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பாகிஸ்தான் , இந்தியா உறவில் இந்தியா சற்று சாந்தமான முகத்தை உலகிற்கு காட்ட முற்பட்டுள்ளமை அவதானிக்கதக்கது. இந்தியா கஷ்மீர் பிரச்சினையையும் கூட பாகிஸ்தானுடன் பேச தயாராகவுள்ளதாக தெரிவித்து சில நகர்வுகளை செய்துள்ளது. இந்த இந்தியாவின் புதிய நகர்வு சீனாவை சங்கடப் படுத்தியுள்ளதாக நோக்கினாலும் வெடிக்கும் குண்டுகளுடன் அவர்களை தொடர்பு படுத்த போதுமான ஆதரங்கள் எதுவும் இல்லை என்பது கவனிக்கதக்கது.
ஆக இந்தியாவில் வெடிக்கும் குண்டுகளுக்கு காரணமாக உடனடியாக முஸ்லிம் பெயர்கள் பயன்படுத்தபடுவது கூட உளவு துறைகளின் ஊடகங்கள் மீதான செல்வாக்கை காட்டுகின்றது. இந்த படு மோசமான நிலையிலும் முஸ்லிம்கள் பொறுமையாக இருப்பது ஆச்சரியமான விடையம். முஸ்லிம் சமூகத்தில் உள்ள சில வாலிபர்கள் சில குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்டாலும் அவ்வாறான சம்பவங்கள் மிகவும் சிறிய அளவில்தான் இடம்பெற்றுள்ளது. இந்திய முஸ்லிம்களை இந்து பயங்கரவாதம் தலையில் கடப்பாரையால் அடிக்கும்போது அதை தடுக்க முஸ்லிம் தரப்பு கையை உயர்த்தினாலும் அதை இஸ்லாமிய பயங்கரவாதமாக இந்திய அரசும் , இந்திய ஊடகங்களும் சித்தரித்து வருகின்றது .
நமது பிராந்தியத்தில் இந்தியா மிகவும் வேகமாக புதிய வியூகம் வகுக்க தொடங்கிவிட்டுள்ளது, இந்தியாவின் புதிய வியூகத்தில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதை நிகழ்வுகள் காட்டுகின்றது. அவதானம் வேண்டும்.  மும்பாய் குண்டுகளை வைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவற்றின் சொந்தக்கரகர்கள் உளவு அமைபினர்தான்.

-lankamuslim-

Jul 19, 2011

Lakbima News பத்திரிகையில் எழுதப்பட்ட Islamic Fundamentalism grows in Kattankudy எனும் ஆக்கம்


காத்தான்குடி சம்பவம் அந்நிய சமூகங்களால் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்பதை எமது வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக......
காத்தான்குடி சம்பவம் அந்நிய சமூகங்களால் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்பதை எமது வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக Lakbima News பத்திரிகையில் எழுதப்பட்ட Islamic Fundamentalism grows in Kattankudy எனும் ஆக்கம் இங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி : மீள்பார்வை மற்றும் யாழ் முஸ்லிம் இணையங்கள்காத்தான்குடி நகரிலுள்ள முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு கடந்த வாரம் நீதிமன்றத்தினால் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு என்னவெனில், இணையத்தளம் மூலம் ஆபாசப்படங்கள் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளம் பெண் பிள்ளைகளும் நிரபராதிகள். அவர்கள் அவ்வாறான குற்றத்தை செய்யவில்லையென்று பள்ளிவாயல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதாகும். இக்குற்றச்சாட்டை அந்த இரு இளம் யுவதிகளும் மறுத்தமையும் குறிப்பிடத்தக்கது.InternetCafe யிலிருந்து வெளியேறிய 17 வயதை யுடைய இரு யுவதிகள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களால் சுற்றி வளைக்கப்பட்டனர், அவ்விருவரும் ஆபாசப் படங்கள் பார்த்ததாக அங்கிருந்தவர்களால் குற்றம் சாட்டப்பட்டது. பின்பு அவ்விருவரும் வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.பின்பு அவ்விரு யுவதிகளும் ஓர் இஸ்லாமிய நிறுவனத்தின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்தோடு பள்ளிவாயல் ஒலிபெருக்கி மூலம் இவ்விரண்டு யுவதிகளும் ஆபாசப் படங்கள் பார்த்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவ்விருவரையும் குற்றத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காகவே அவ்வாறு இஸ்லாமிய நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பெரிய மக்கள் கூட்டமொன்று அந்த இஸ்லாமிய நிறுவனத்தை சூழ்ந்து கொண்டதோடு அவ்விரு யுவதிகளையும் திட்டித் தீர்த்தனர்.இறுதியில் பொலிஸார் இவ்விடயத்தில் தலையிட்டு அவ்விரு யுவதிகளையும் விடுவித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். காடையர்களால் தாக்கப்பட்ட காயங்களுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. பின்பு அவ்விரு யுவதிகளில் ஒருவரின் தந்தை நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றம் அவ்விரு யுவதிகளும் நிரபராதிகள் என்றும் அதனைப் பள்ளிவாயல் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. தனது மகளுக்கு நீதியை நிலைநாட்டியமை குறித்து ஒரு யுவதியின் தந்தையான முஹம்மத் யூஸுப் ரஸ்ஸாக் நீதிபதிகளுக்கு நன்றி கூறினார்.இந்நிகழ்வு கிழக்கு முஸ்லிம் பகுதிகளில் வளர்ந்துவரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கான ஓர் எடுத்துக்காட்டு மட்டுமேயாகும். பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இப்பகுதிகளில் முகத்தை மூடி அணியும் புர்காவை அணியத் தொடங்கியுள்ளனர். இளம் யுவதிகளும் இவ்வாறு ஆடை அணியுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அத்தோடு இஸ்லாத்திற்கு மாறான செயற்பாடுகளை எதிர்ப்பதற்காக தாடி வைத்த ஆண்கள் ஒன்றிணைகிறார்கள். மேற்கத்தேய நாகரிகத்திற்கு அமைய ஆடை அணியும் பெண்களைப் பார்த்து பலர் முகம் சுழிப்பதோடு அவர்கள் பகிரங்கமாக கேவலப்படுத்தப்படுகிறார்கள்.இஸ்லாமிய மத்ரஸாக்கள் இப்பகுதியில் அதிகமாகக் காணப்படுவதோடு அவை அல்-காஇதாவினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தீவிர இஸ்லாமியப் போக்கைப் போதிக்கின்றன. கடும்போக்கு கொண்ட பெற்றோர் தம் பிள்ளைகளை புர்கா (நிகாப்) அணியுமாறு நிர்ப்பந்திக்கின்றனர் என்று ரியாஸ் ஸாலி குறிப்பிடுகிறார். இவர் முஸ்லிம் மார்க்கச் செயற்பாட்டாளரும் வட அமெரிக்க இஸ்லாமிய சகவாழ்வு மையத்தின் தலைவருமாவார்.பெண்கள் முகம் மூடும் வழக்கம் எமது நாட்டில் இருந்ததில்லை. அப்படியொரு வரலாறும் இங்கில்லை. இவையனைத்தும் வஹ்ஹாபிகளால் இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் காத்தான்குடியில் ஷரீஆ சட்டத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர் என்றும் இது ஷரீஆ சட்டத்திற்கான இடமல்ல, முஸ்லிம்களுக்கென்று தனியானதொரு சட்டத்திற்கான எந்தத் தேவையும் இந்த நாட்டில் இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 6 அல்லது 7 வருடங்களுக்கு முன்புதான் இஸ்லாமிய அடிப்படைவாதம் காத்தான்குடிக்கு அறிமுகமானது. அதற்கு முன்பு அவர்கள் கண்டி, கல்முனைப் பகுதிகளிலேயே செயற்பட்டு வந்தனர். காத்தான்குடியில் அவர்களுக்கான வாய்ப்பு இருக்கவில்லை. இந்த வஹ்ஹாபிகளின் வளர்ச்சிக்கான காரணம் அரசியல்வாதிகளாகும். தங்களது சுயலாப அரசியலுக்காக கடும்போக்கு இஸ்லாத்தை இவர்கள் ஆதரித்தனர்.வஹ்ஹாபிசமானது நவீன இஸ்லாமிய சிந்தனைகள், சூபித்துவம் போன்றவற்றிற்கு எதிரானதாகும். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வாழைச்சேனைப் பகுதியில் சூபித்துவ இஸ்லாத்தைப் போதித்துக் கொண்டிருந்த றிஸ்வி மௌலவி கடும்போக்குவாதிகளான ஒரு குழுவினரால் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அவரது தாடியை நீக்கிவிட்டு நிர்வாணப் பெண்களோடு அவரை நிற்பதற்கு நிர்ப்பந்தித்து அதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்பு அப்புகைப்படங்களை மக்கள் மத்தியில் விநியோகித்துள்ளனர். வஹ்ஹாபிகளின் தொடர்ந்தேர்ச்சியான தொந்தரவுகளால் றிஸ்வி மௌலவி மௌனமாகிவிட்டார். தற்போது அவர் வாழைச்சேனையில் வசிக்கிறார். "ஆரம்பத்தில் நான் சுதந்திரமானவனாக இருந்தேன். ஆனால் தற்போது என் உயிருக்குப் பயப்படுகிறேன்" என்று லக்பிம நியூஸ் பத்திரிகையுடனான தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டார்.காத்தான்குடியில் இஸ்லாமிய கடும்போக்குவாதிகளுக்கு ஏற்ற சூழ்நிலை காணப்படுகிறது. இந்த வஹ்ஹாபிகள் பல நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் பின்பற்றி வந்தவற்றை இல்லாமல் செய்கிறார்கள். கடும்போக்கான கருத்துக்களைக் கொண்டு முஸ்லிம் இளைஞர்களை கடும்போக்குவாதிகளாக மாற்றுகிறார்கள் என்று மௌலவி றிஸ்வி குறிப்பிட்டதோடு, இந்த வஹ்ஹாபிகள் ஜிஹாதிற்காக தயாராகிறார்கள் என்றும் எச்சரித்தார்.நன்றி-நேசம்நெற்

Jul 18, 2011

பிறை தொடர்பான முதலாவது தேசிய மாநாடு


பிறை தொடர்பான முதலாவது தேசிய மாநாடு  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில்கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இந்த முதலாவது தேசிய பிறை மாநாடு உள்நாட்டில் பிறை தென்படுவதை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய மாதம் தொடர்பான அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிறை பார்த்தல் வெற்றுக் கண்ணால் பார்ப்பதை அடிப்படையாகக் கொள்ளுதல் , ஒரு நாளின் பிறை வெற்றுக் கண்ணுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதிசெய்யுமிடத்து வானியல் அவதானத்தின் அடிப்படையிலான அந்நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படுவதோடு அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை தென்படாத நாளென ஏற்றுக்கொள்ளல்,வானியல் துறையில் புலமைபெற்ற ஒரு முஸ்லிம் அறிஞர் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவிற்கு துணையாகச் செயற்படுதல், பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது சாத்தியமற்றது என முடிவு செய்யப்பட்ட நாளில் ஒருவரோ அல்லது பலரோ பிறை கண்டதாகக் கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமைத்துவத்துக்கு கட்டுப்படல் என்ற வகையிலும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செல்லல் என்ற வகையிலும் குறித்த நாளில் நோன்பு நோற்பதற்கோ பெருநாள் கொண்டாடுவதற்கோ பிறரைத் தூண்டவோ பிரகடனப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் அல்லது தாம் கண்டதாகக் கருதும் பிறையின் அடிப்படையில் செயற்படும் அனுமதியைப் பெறுவர்.என்றும் தீர் மானிக்கபட்டுள்ளது.
இத் தீர்மானங்கள் குறித்து மக்களுக்கு தெளிவு படுத்தும் கருத்தரங்குகளை நாடளாவிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் ஊடாக நடாத்தவும் இம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதன் பிரகாரம் அனைத்து மஸ்ஜித்களிலும் நாளாந்தம் மஃரிப்புத் தொழுகையின் பின்னர் பிறைத் திகதியை அறிவிப்புச் செய்தல், மாதாந்தம் 29ஆம் நாள் மாலை பிறை பார்ப்பதற்கான ஏற்பாட்டினை நாட்டின் அனைத்து மஸ்ஜித்களிலும் மேற்கொள்ளுதல், ஒவ்வொரு ஜூம்மா மஸ்ஜித்திலும் மூன்று பேர் விகிதம் நாடளாவிய ரீதியில் பிறைக்குழு பிரதிநிதிகளை நியமித்தல், பிறை மாதத்துடன் தொடர்பான இபாதத்துக்கள் நிறைவேற்றப்படுவது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் கலண்டர் திகதி அடிப்படையில் அமைதல் வேண்டும் என்றும் தீர்மானிக்க பட்டுள்ளது.
கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் அஷ்ஷெய்க் ஏ. எல். எம். றிழா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, அதன் உபதலைவரும் ஜாமியா நழிமியா பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். எம். அஹ்மத் முபாரக்,  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிராந்திய கிளைகளின் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் டாக்டர் எஸ்.ஆகில் அஹ்மத், அஷ்ஷெய்க் ஏ. எம். அப்துல்லாஹ் மக்கி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி உட்பட பலர் கலந்துகொண்டனர். இது தவிர நாடளாவிய ரீதியிலிருந்து உலமாக்கள், மார்க்க அறிஞர்கள் புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்துள்ளன

“இவர் போல யாரென்று” மறக்க முடியாத சில மனிதர்கள் -மேட்டுப்பாளையம் ஜமால் மொஹிடீன்

எஸ்.எம்.எம்.பஷீர்
“தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர்..” -நன்னெறி- இலண்டனில் சுமார் மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து தான் வாழ்ந்த சமூகங்களுக்கு மத்தியில் ஆளுமை செலுத்திய தமிழ் நாடு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மறக்கப்பட்டுப் போன ஒரு மனிதர் பற்றிய நினைவு என்னை அவர் பற்றி எழுதத் தூண்டியது.

அந்த வகையில் நான் கேள்வியுற்ற ஓரிரு தடவைகள் 1994ல் நேரடியாக சந்திக்க கிடைத்த ஒரு நல்ல மனிதர்தான் ஜமால் மொஹிடீன். இவர் ஒரு பிரபல வர்த்தக குடும்பத்தில் மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர். இவர் அன்றைய பர்மாவின், இன்றைய மியன்மாரின் தலைநகரான இரங்கூனில் உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்துவந்த தனது தந்தையுடன் சென்று வாழ்ந்து அங்கு நீ மின் பர்மிய ஆட்சி அதிகாரத்தை 1962ல் கைப்பற்றியவுடன் ஏற்படுத்தப்பட்ட அயல்நாட்டு மக்களுக் கெதிரான  கலவரங்கள் அங்கு அதிகளவில் வாழ்ந்த பர்மிய இந்திய மக்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக சுமார் மூன்று இலட்சம் இந்த பர்மிய இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற நேரிட்டது, மேலும் 1964 லில் அதிகளவில் வணிக உற்பத்தி துறைகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியர்களின் சொத்துக்கள் யாவும் தனியார் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட ஒரு இந்தியர்தான் ஜமால் மொஹிடீன் குடும்பத்தினர். அங்கிருத்து மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு தமது கோடிக்கணக்கான சொத்துக்கள் யாவற்றையும் இழந்து சென்றாலும் , அங்கிருந்து1966ல் இலண்டனுக்கு வந்து தனது வியாபார அனுபவத்தை கொண்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை செய்து கொண்டு சில ஆண்டுகள் ஆரம்பத்தில் செயற்பட்டபோதும் பின்னர் தனது வியாபாரங்கள் துரதிஷ்டவசமாக நஷ்டமடைய நேரிட்டபோது , 1985 ல் ஒரு சமூகப் பணியாக , அதிக வியாபார ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டு , இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட தமிழ் மொழிமூல இஸ்லாமிய மதம் சம்பந்தமான புத்தகங்களை தருவித்தும மேலும் ஆங்கில இஸ்லாமிய நூல்களை பிற நாடுகளிலிருந்து தருவித்தும் மதராஸ் புத்தக நிலையம் எனும் சிறு வியாபார நிலையமொன்றை பின்ஸ்பரி பார்க் (Finsbury Park) எனும் இடத்தில் நிறுவி வியாபாரத்துடன் மக்களுடனான தொடர்பாடல்களையும் அதிகரித்து கொண்டார். இவரின் நூலக வியாபாரத்துக்கு இவரின் ட்ரினிடாட் நண்பரான மொஹம்மத் ஹனிப் என்பவர் காலவறையரையற்ற கடனனாக முப்பத்தி இரண்டாயிரம் பவுண்ஸ்களை ஜமால் மொஹிடீனுக்கு கடனாக வழங்கினார்.
அவரின் நாடாளுமன்ற தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஜான் பட்டேன் (John Pattern) என்பவரை இவர் ஆதரித்து பிரச்சாரமும் தன்னை சந்திப்போர்களிடம் செய்ததுடன் ஜான் பட்டேன் தேர்தலில் வெற்றியீட்டியது மட்டுமல்ல கல்வி அமைச்சராகவும் பதவியேற்றபோது ஜமால் மொஹிடீன் பிரித்தானியாவில் முஸ்லிம் பாடசாலைகள் நிறுவப்படவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார். உண்மையில் முஸ்லிம் பாடசாலைகளை பிரித்தானியாவில் நிறுவும் சிந்தனை முகிழ்த்தவர்களில் இவரும் ஒரு முன்னோடியாக திகழ்கிறார்.
ப்ரிக்ஸ்டன் க்ரைஸ்ட் தேவாலய மதகுரு; ரேவேரன்ட் வில்லியம் லம்ப்டே , செயின்ட் தாமஸ் வீதி , செயின்ட் தாமஸ் தேவாலய மதகுரு ஸ்டீபன் கோல ;, பின்ஷ்பரி பார்க் எவன்ஜலிகள் தேவாலய மதகுரு ஆகியோர் இவரின் நண்பர்கள் மட்டுமல்ல இவரின் புத்தக கடைக்கு சென்று மாதங்கள் பற்றி அடிக்கடி சென்று ஜமால் மொஹிடீனுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்பவர்களில் சில குறிப்பிடத்தக்கவர்கள் என்பது ஜமால் மொஹிடீனின் பரந்து பட்ட சமூக தொடர்பாடல்களை தொட்டுக்காட்டும் பண்பாக மிளிர்ந்தது. இவர் எப்போதும் அனாதரவானவர்களுக்கு தனது வீட்டில் ஆதரவளித்து உதவிகள் புரிவதையும் பல ஆதரவற்ற இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஆலோசனை வழங்கி தனக்கு தெரிந்தவர்களிடம் அவர்களுக்கு வேலைகளுக்கு சிபாரிசு செய்வது, தனது புத்தக நிலையத்தில் வேலை வழங்குவது என்று தன்னால் முடிந்தளவு உதவி புரிவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
தனது வயோதிப காலத்தில் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு சென்று அவர் ஓய்வு பெற்று அங்கே பல வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார் என்று தெரியவந்தபோது அவர் என்னிடம் காட்டிய அன்பும் கரிசனையும் என்னை அவரை நினைவு கூரச்செய்தது. இலண்டனிலும் வந்து தமிழ் மூல நூல்களை விற்று தமிழ் மட்டுமே வாசிக்க கூடிய சிலருக்கு தனது சமூகத்தை சமயத்தை கற்றுக்கொள்ள செய்த அவரின் ஞாபகம் நிச்சயம் வரும். இன்று பல வருடங்கள் உருண்டோடி விட்டாலும் இவர் போல யாரென்று வாழ்ந்தவர்களை நினைப்பது என்பது மக்களில் வாழ்பவர்கள் யார் என்பதை நமக்கு நினைவுறுத்தும்.
-lankamuslim-

மூத்த முஸ்லிம் ஊடகவியலாளரின் பார்வையில் தமிழ், முஸ்லிம் உறவு


மூத்த முஸ்லிம் ஊடகவியலாளரும், முஸ்லிம் மீடிய போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதான ஆசிரியருமான என்.எம். அமீன் இன்று வெளியான அந்த பத்திரிகையில் ‘யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும், தமிழ் முஸ்லிம் உறவும் ‘ என்ற தலைப்பில் தீட்டியுள்ள ஆசிரியர் தலையங்கத்தை இங்கு மீள் பதிவு செய்கின்றோம்: 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் இரண்டு மணித்தியால அவகாசத்தில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 20 வருடங்களின் பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள சுமுக நிலை காரணமாக தமது இருப்பிடங்களில் மீண்டும் குடியேறி வருகின்றனர்.
கடந்த 20 வருடங்களாக ஆங்காங்கே சிதறிய நிலையில் சொந்த இருப்பிடம் இல்லாது ‘தமது தாயகமும் வடக்கே’ என்ற உணர்வுடன் வாழ்ந்து வந்த மக்கள் மத்தியில் தற்போது புதுவிதமான நம்பிக்கை ஒளிக்கீற்று வெளிப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் குடியேறியுள்ளனர். விரிவாகஇந்நிலை உருவாகக் காரணம் தற்போது நிலவி வரும் அமைதியான சூழ்நிலையாகும். இவ்வாறு குடியேறியுள்ள மக்கள் மீண்டும் அப்பகுதியில் தமது சொந்த வாழ்விடத்தில் குடியேறி வாழக்கிடைத்தமைக்கு பெருமிதம் அடைவதோடு ஏற்கனவே அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களுடன் பழைய உறவைப் பேணி ஒற்றுமையாக வாழக்கிடைத்தமை குறித்தும் மகிழ்ச்சியடைகின்றனர்.
இலங்கையில் முஸ்லிம்கள் குடியேறி சுமார் 1200 வருடங்கள் பழைமை வாய்ந்த வரலாறு இருந்து வருவது போன்று அதே காலப்பகுதிக்குட்பட்ட வரலாற்றை யாழ் முஸ்லிம்களும் கொண்டுள்ளனர். இவ்வளவு காலமும் அங்கு வாழும் தமிழ் மக்களுடன் சுமுகமான உறவைப் பேணி வருகின்றனர். இந்த உறவு 20 வருடங்களின் பின்னர் மீண்டும் மலர்ந்திருக்கின்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக குறிப்பிட முடியும். இந்நிலை தொடர வேண்டும். முன்னர் இருந்ததை விட இந்த உறவு மேலும் பலமடைய வேண்டும்.
சுமார் 20 வருட இடைவெளியின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த உறவை மீண்டும் பலப்படுத்த அப்பகுதியில் இன நல்லுறவை வளர்க்கும் வகையிலான நடவடிக்கைகளும் இரு இனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். காரணம், முஸ்லிம் கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போது பிறந்த தமிழ்க் குழந்தைகள் இன்று இளைஞர்களாக உள்ள நிலையில் அவர்களுக்கு இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி எதுவும் தெரியாது. முஸ்லிம்கள் யார்? இஸ்லாமிய மத, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் எவை? எமது சமூக பாரம்பரியங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் எவை என்ற எந்தவிதமான அறிவும் இல்லாத ஒரு நிலையே இருந்து வருகின்றது. இந்த உறவிலான புரிந்துணர்வில் இடைவெளி ஏற்படும் போதே இன ரீதியான முரண்பாடுகளும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன. அந்த நிலை ஏற்பட இடம் வைக்காது இளம் தலைமுறையினரிடையில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்கள் முஸ்லிம்களைப் பற்றி அறிந்துள்ள ஒரே விடயம் ‘சோனி’ என்பதே. அதற்கப்பால் எதையும் அறியாதவர்களாக உள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள உறவை, முன்னர் தமிழரும் முஸ்லிம்களும் ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’ போன்று இணைந்து வாழ்ந்தனர் என்ற நிலையை இளம் தலைமுறையினர் மீண்டும் உணரச் செய்ய வேண்டும். அதற்கான திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களைத் தொடர்புபடுத்தியதான நிகழ்ச்சிகள், வளர்ந்தோர் மத்தியில் இணைப்பையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகள், கலந்துரையாடல்கள் மற்றும் ஒன்று கூடல்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கல்விமான்கள், புத்தி ஜீவிகள், உலமாக்கள், மற்றும் தனவந்தர்கள் ஒன்றுபட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அங்கு குடியேறி வியாபாரத்தில் ஈடுபடு கின்றவர்களின் ஒரே இலட்சியம் வியாபாரத்தில் இலபாம் ஈட்டுவது என்பதாக மட்டும் அமையக் கூடாது. வியாபாரம் மூலம் இன நல்லுறவுக்கு பாலம் அமைக்க வியாபாரிகளால் முடியும். அவர்கள் வியாபார நோக்கமாக வருகின்ற ஏனைய இனத்தவர்களோடு புன்முறுவல் பூத்த முகத்தோடு அவர்களை வரவேற்று இனிமையான வார்த்தைகளைப் பேசி சிறந்த முறையில் கருத்துக்களைப் பரிமாறி எமது முன்மாதிரியை வெளிப்படுத்த வேண்டும். நாம் அங்கு மீண்டும் குடியேறியிருப்பது வியாபாரம் செய்யவும் உச்ச இலாபம் பெறவும் மட்டுமே என்ற உணர்வு அந்த மக்கள் மத்தியில் ஏற்பட இடமளிக்கக் கூடாது. அத்துடன் ஹோட்டல் உரிமையாளர்கள் அங்கு நடமாடுகின்ற ஏனைய சமூகத்தவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் விதமாக அதிகாலை 5.00 மணியில் இருந்து இரவு 10.00 மணி வரையில் பெருத்த சப்தத்தில் வானொலிப் பெட்டிகளை இயக்குவது மற்ற மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவதாக அமையலாம். இச்செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும்.
யாழ் ஊடகங்களின் பொறுப்பு
இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற ஊடகங்களுக்கும் அங்கு வாழ்கின்ற தமிழர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரிடையில் இருந்து வருகின்ற புரிந்துணர்வைப் பாதிக்கின்ற விதமாக முஸ்லிம்களைத் தொடர்பு படுத்தி செய்திகள் தகவல்களை வெளியிடக் கூடாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய கடப்பாடு ஊடகங்களுக்கு இருந்து வருகின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ள முஸ்லிம்களில் அதிகமானோர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குறித்து யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் அடிக்கடி தவறானதும் ஆதாரமற்றதுமான செய்திகள் வெளியாகின்றன. அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் குறித்து தவறான கண்ணோட்டத்தில் வரையப்பட்ட செய்திகளைப் பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. யாழ்ப்பாணத்தில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் ரூபா 20 இற்கு ஒரு கிலோ இரும்பைக் கொள்வனவு செய்து தெற்கிற்கு கொண்டு வந்து ரூபா 80 இற்கு விற்பனை செய்வதாக அந்த செய்திகள் கூறுவதாக அமைந்துள்ளன. இந்த செய்திகள் இந்த வியாபாரிகள் மக்களை ஏமாற்றி குறைந்த விலையில் இரும்பைப் பெற்று கொள்ளை இலாபம் உழைக்கின்றனர் என்பது போன்ற கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாக அமைகின்றது.
ஆனால் இதன் உண்மை நிலை என்னவெனில் ஒரு கிலோ இரும்பை ரூபா 20 இற்கு கொள்வனவு செய்தாலும் அதனை கொழும்பிற்கு கொண்டு வருவது வரையில் ஒரு கிலோவுக்கு ரூபா 60 இற்கு மேல் செலவாகின்றதை இப்பத்திரிகைகள் கண்டு கொள்ளாமல் கொள்வனவு செய்கின்ற விலையையும் விற்பனை செய்கின்ற விலையையும் மட்டும் குறிப்பிட்டிருப்பது வேண்டுமென்றே தவறான கருத்தை வழங்க முற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இரும்பு தென்பகுதிக்கு வந்து சேருகின்றது வரையில் ஒரு கிலோவுக்கு அந்த வியாபாரிகள் ரூபா 60 இற்கு மேல் செலவு செய்கின்றனர்.
அத்துடன் இரும்பு வியாபாரத்தில் 50 முஸ்லிம் வியாபாரிகள் அளவில் ஈடுபட் டிருக்கின்ற போதும் அவர்களுக்கு ஆங்காங்கே சென்று பழைய இரும்பை சேகரித்து விநியோகிப்பவர்களாக சுமார் 2000 அளவிலான தமிழர்களே ஈடுபட்டுள்ளனர். அதனால் இந்த வியாபாரம் பற்றி பேசும்போது இரு இனத்தாரும் ஈடுபட்டிருப்பதை ஊடகங்கள் புரிந்துகொள்ளத் தவறியிருந்தமையும் கவலை தருகின்ற விடயமாகும்.
அத்துடன் இந்த இரும்பு வியாபாரத்தை வடக்கிலிருந்து தெற்கிற்கான இரும்புக் கடத்தல் என்று தலையங்கம் இட்டு ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமையும் கவலை தருவதாய் அமைகின்றது. கடத்தலுக்கும் வியாபாரத்தில் ஒரு இடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதிலும் வேறுபாடுகள் இருப்பதை புரிந்துகொள்ளாமல் செய்தி எழுதப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இவ்வாறான செய்திகள் மக்கள் மத்தியில் தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதோடு அவை இன ரீதியான முரண்பாடுகளுக்கும் சந்தேகங்களுக்கும் வழிவகுக்கலாம்.
ஊடகங்கள் எப்போதும் மக்களுக்கு தகவல்களை வழங்குவதாக இருப்பதோடு அவை நடுநிலைப் பார்வையுடனும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமலும் ஆதாரபூர்வமானதாகவும் அமையவேண்டும் என்பது ஊடக தர்மத்தின் அடிப்படையாகும். செய்திகள் தகவல்களால் மக்கள் தவறான வழிக்கு இட்டுச் செல்லக் கூடாது. அத்துடன் குரோத உணர்வுடன் செய்திகள் தகவல்களை எழுதும் கலையை சமூகம் ஒருபோதும் மதிநுட்பமான ஊடக செயற்பாடு என்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆதலால் யாழ்ப்பாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவைப் பலப்படுத்துவதில் அங்கிருந்து செயற்படுகின்ற ஊடகங்களின் பங்களிப்பும் இன்றியமையாததாகும்.
-lankamuslim-


المشاركات الشائعة