Search This Blog

May 10, 2011

பிரபாகரன் முஸ்லிமாக இருந்திருந்தால் நேட்டோ படை தாக்கியிருக்கும் !


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முஸ்லிமாக இருந்திருக்கும் பட்சத்தில் அவருக்கு மேற்கத்தேய உலகின் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என்று அமைச்சர் டளஸ் அலஹப்பெரும குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பு இஸ்லாமியப் பின்னணியுடனோ அல்லது அதன் தலைவர் பிரபாகரன் முஸ்லிமாகவோ இருந்திருக்கும் பட்சத்தில் ஒசாமாவுக்குக் கொடுத்த அதே தண்டனையை மேற்குலகம் பிரபாகரனுக்கும் கொடுத்திருக்கும் என்று அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
சில நாட்களுக்கு முன் மாத்தறையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொழில்சார் நிபுணர்கள் அமைப்பின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பு அல்லது அதன் தலைவர் இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டிருந்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கெதிரான தாக்குதல்களுக்கு நேட்டோ படையினரே தலைமை தாங்கியிருப்பர்.
மேற்கத்தேய நாடுகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு எதிராக, அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மட்டும் தான் பயங்கரவாதிகளாகக் கணிக்கப்படுகின்றார்கள் என்றும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது

No comments:

Post a Comment

المشاركات الشائعة