
இதில் 20,274 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத்துறைக்கு 1147 பேரும் பொறியியல் துறைக்கு 1247 பேரும் முகாமைத்துவத்துக்கு 3,287 பேரும் கலைத்துறைக்கு 3,806 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, மொத்தமாக 86 பாடநெறிகளுக்காக 20,274 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை புதிதாக சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவமென்ற பாடநெறியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு 101 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இப்பாடநெறி ரஜரட்ட மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் அதி திறமையான புள்ளிகளைப் பெற்ற 10% மானோர் தாம் விரும்பும் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்ய முடியுமென்பதுடன், 40% மானவர்கள் திறமையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்ய முடியுமெனவும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment