
அந்த செய்தியில் ஒன்றாக கடந்த புதன் கிழமை நேட்டோ விமான படைகள் நடாத்திய தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களில் 12 சிறுவர்களும் பல பெண்களும் அடங்குவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது மற்றுமொரு செய்தியில் 52 பேரில் 20 ஆப்கானிஸ்தான் போலீஸ் சிப்பாய்களும் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் கர்சாய் நிர்வாகம் தெரிவிக்கின்றது விரிவாக
அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் ஆப்கானிஸ்தானில் நடை பெருகின்றது ஒரு புறம் பயங்கர வாதத்திற்கு எதிரான யுத்த மையம் ஆப்கானிஸ்தான்தான் அங்குதான் யுத்தம் பலமாக நடாத்தப்படவேண்டும் என்று கூறி ஒபாமா நிர்வாகம் மேலதிக 30 ஆயிரம் படைகளை கடந்த நவம்பரில் அனுப்பியது மறுபுறம் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க துருப்புகள் வெளியேற்றம் தொடங்கி அந்த வெளியேற்றம் 2014 ஆம் ஆண்டுதான் முடிவடையும் என்றும் கூறிவருகின்றது அதேவேளை ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் விரிவடைந்து செல்கின்றது என்பது வேறு கதை ஒன்றை சொல்கின்றது.
No comments:
Post a Comment