Search This Blog

Jun 20, 2011

ஜாதிக ஹெல உறுமயவினரின் அச்சுறுத்தல் காரணமாக தெஹிவளையில் முஸ்லிம் வணக்கத்தலமொன்று மூடப்பட்டுள்ளது



ஜாதிக ஹெல உறுமயவினரின் கடும் அச்சுறுத்தல் காரணமாக தெஹிவளை பாத்தியா மாவத்தையில் செயற்பட்டு வந்த முஸ்லிம் வணக்கத்தலமொன்று மூடப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக அங்கு இயங்கி வந்த பிரஸ்தாப வணக்கத்தலத்தில் ஐவேளைத் தொழுகை மற்றும் குர்ஆனைக் கற்பித்தல் நடவடிக்கைகள் அமைதியான முறையில் இடம்பெற்று வந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயினும் பிரஸ்தாப வணக்கத்தலத்தை மூடாது விட்டால் அதன் மதகுருமார் படுகொலை செய்யப்படுவார்கள் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதேச முக்கியஸ்தர்கள் விடுத்த நேரடி அச்சுறுத்தல்  காரணமாக தற்போது அவ்வணக்கத்தலம் கைவிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள வணக்கத்தலத்தின் அருகிலேயே ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரும், ஆளுங்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வரும் வசிக்கின்ற போதும் அவர் இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமலிருப்பதாகவும் பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

-Tamilwin News-



No comments:

Post a Comment

المشاركات الشائعة