
இந்த அதிர்வு சுமார் ஐநூறு சதுர மீற்றர்கள் பரப்பில் தான் உணரப்பட்டுள்ளது. இதனால் 8 வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்களும், நிலத்தில் சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. அதில் ஒரு வீட்டின் கொங்ரீட்டும் இடிந்து விழுந்துள்ளது. இங்கு சில வீடுகளின் நிலத்தில் சுமார் 20 சென்றி மீற்றர்கள் நீளத்திற்கு சுமார் 6 மில்லி மீற்றர்கள் அகலத்திற்கு சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன விரிவாக இச்சமயம் வீடுகளில் சில பொருட்கள் உருண்டு விழுந்ததையும், வீடுகளின் ஜன்னல்கள் ஆடியதையும் பிரதேச வாசிகள் உணர்ந்துள்ளனர் பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளை பதிவு செய்யும் இயந்திரங்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் எதுவுமே பதிவாகவில்லை என்றும் தொடர்பான மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளபடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment