
தமது கலாசாரத்தை இறுக்கமாக பின்பற்றும் முஸ்லிம் பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளை இவ்வாறான பயிற்சி நெறியை தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இத்தலைமைத்துவ பயிற்சிநெறி அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதனால் முஸ்லிம் மாணவிகள் தமது பல்கலைக்கழக கல்வியை கைவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என சஹ்பி எச். இஸ்மாயில் கூறினார்.
எனவே, முஸ்லிம்களின் கலாசாரத்தை கவனத்திற் கொண்டு குறித்த தலைமைத்துவ பயிற்சிநெறியிலிருந்து முஸ்லிம் மாணவிகளுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு மாற்றுக் கொள்கைக்கான பல்கலைக்கழக மாணவர் சங்கம் உயர்கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.-தமிழ் மிரர் றிப்தி அலி
No comments:
Post a Comment